குறித்த சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளது.
குறித்த மண் மேட்டில் மூவர் சிக்கியிருந்த நிலையில் தாயும், மகனும் மீட்கப்பட்டுள்ளதாகவும், மகள் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பணிபுரியும் தாதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்தில் வீட்டில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் அலவ்வ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.