(20-11-2021)
கொழும்பிலுள்ள விருந்தகமொன்றில் இன்று (20) காலை வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது.
கொழும்பு 7, பழைய குதிரைப் பந்தய மைதானத்தில் அமைந்துள்ள விருந்தகத்தில் இந்த வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது.
வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து விருந்தகத்தில் தீப்பற்றி உள்ளது.
எரிவாயு கசிவால் இந்த விபத்து இடம் பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் போதும் சம்பவத்தில் எவருக்கும் உயிர்ச் சேதங்கள் அல்லது காயங்களோ பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.