மன்னார் நிருபர்
(11-12-2021)
மன்னார் பஸார் பகுதி சுற்று வட்டத்தில் இன்று (11) சனிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் விபத்து இடம் பெற்றுள்ளது.
மன்னார் பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து மாத்தளைக்கு சென்ற அரசு பேருந்து மன்னார் நகர சுற்று வட்டத்தில் துவிச்சக்கர வண்டியில் வந்த இருவரை மோதித் தள்ளியது.
இதில் துவிச்சக்கரவண்டியில் வந்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.