(25-12-2021)
அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ்காரர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 4 பொலிஸ் பொலிஸ்காரர்கள் உயிரிழந்துள்ளதுடன், 2 பொலிஸ் பொலிஸ்காரர்கள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த பொலிஸ் நிலையம் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்ததுடன், துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸ் பொலிஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில்,நள்ளிரவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரின் உயிரை பறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.
சம்பவத்தின் போது 3 பொலிஸ் பொலிஸ்காரர்கள் உயிரிழந்ததுடன்,மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் சாஜன் ஒருவர் வீடு செல்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் விடுமுறை கோரியுள்ளதுடன்,விடுமுறை வழங்காததால் ஆத்திரமடைந்த பொலிஸ் சாஜன் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வாகனத்தில் ஏறி ரோந்து நடவடிக்கைக்கு செல்வதற்கு தயாராக இருந்தபோது அவர் மீது ’ துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும், அவரை தடுக்க முற்பட்ட பொலிஸார் மீதும் அவர் துப்பாக்கி பிரயோகம் செய்ததை அடுத்து சம்பவ இடத்தில் 3 பொலிஸார் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.