(09-01-2022)
சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யீ உத்தியோகபூர்வ பயணமாக நேற்றிரவு (8) இலங்கை வந்தடைந்த நிலையில் அவரை இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச விமான நிலையத்தில் வரவேற்றார்.
நேற்றிரவு கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைத்தில் வாங்-யீ பயணித்த விமானம் தரையிறங்கியது.
சீனா- இலங்கை ஜனநாயக உறவுகளின் 65 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் இலங்கை விஜயம் செய்துள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை வந்த சீன வெளியுறவு அமைச்சர் இன்று ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருடன் கலந்துரையாடவுள்ளார்.
கென்யா, எரித்திரியா, கொமொரோசு மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்த பின்னரே சீன வெளியுறவு அமைச்சர் இலங்கை வந்துள்ளார்.