(10-1-2022)
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் விமான நிலையக் கூரையிலிருந்து, பாதுகாப்புத் தரப்பினரால் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் அபுதாபி வழியாக பிரான்ஸின் பாரிஸ் நகருக்குச் செல்ல முயன்றதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலைய வெளியேறும் முனையத்தில் ஆவணங்களைச் சரி செய்வதற்காக வந்த அவர் மீது சந்தேகமடைந்த அவர், விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினரிடம் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து கூரையை நோக்கி ஓடினார்.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் மேற்கூரையில் அந்த நபர் பதுங்கியிருந்த இடத்துக்குச் சென்று கமராக்களை கண்காணித்து அவரைக் கைது செய்தனர்.
அவர் கழுத்தில் தெளிவாகத் தெரியும் இலக்கத்தை பச்சை குத்தியுள்ளார்.
மேலும் அவர் வெளிநாட்டு சிறையிலிருந்து தப்பியிருக்கலாம் அல்லது பயங்கரவாதக் குழுவின் உறுப்பினராக இருக்கலாம் என்று பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர்.