(11-1-2022).
யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் கடற்படையினரின் படகு மோதியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் நேற்று இரவு(10) இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
படகு ஒன்றில் தனியாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மாதகல் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக மாதகல் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடற்படையினரின் கண்காணிப்பு படகே குறித்த மீனவரின் படகு மீது மோதியதாகவும் மீனவர் பயன் படுத்திய படகு முற்றாக சேதம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.