யாழ்ப்பாணம் தீவகம் ஊர்காவற்றுறையில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கர்ப்பிணிப் பெண்ணான ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) என்ற ஒரு பிள்ளையின் தாய் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
குறித்த பெண் கொலை தொடர்பில் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான இருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நெடுந்தீவை சேர்ந்த நபர் ஒருவர் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்த பட்டுள்ளார்.
குறித்த நபரை 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், மற்றொரு கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் நபர் ஒருவரும் தானும் இணைந்து கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியிருந்தாக பொலிஸார் தெரிவிக்கின்றன.