ஒட்டாவா வாகன ஆர்ப்பாட்ட ஊர்வல விவகாரத்தில் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது தலைமைத்துவத்தை உச்ச நிலையில் நின்று தீவிரமாகக் காட்ட வேண்டும் என்று நேற்று கருத்துத் தெரிவித்துள்ளார் கனடாவின் தேசிய என்டிபி கட்சித் தலைவர் ஜக்மீத் சிங்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் , நாடு முழுவதும் உள்ள அண்டை மாகாணங்களையும் நகரங்களையும் அச்சுறுத்தி வரும் இந்த வாகன ஆர்ப்பாட்ட ஊர்வல விவகாரத்தில்தனால் ஏற்படடுள்ள நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டத்தில் பணியாற்ற வேண்டும் என்றும் தனது அழைப்பை மீண்டும் வலியுறுத்துகிறார்.
ஒட்டாவா நகர் வாழ் மக்கள் இப்போது கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக முற்றுகைக்கு உட்பட்டுள்ளனர், அரசாங்கத் தலைமை இல்லாததால், உள்ளூர்வாசிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைக்க அல்லது ஆக்கிரமிப்பிலிருந்து தொடர்ச்சியான சத்தத்தை நிறுத்த நீதிமன்றத் தடை உத்தரவுகளுக்கு விண்ணப்பிப்பதைத் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.
இந்த விடயமானது எதைக் காட்டுகின்றது என்றால் கனடாவின் மத்திய அரசிதலைமையின் வெற்றிடம் உள்ளது என்பதுதான். இவ்வாறிருக்க பாராளுமன்றத்தில் பின்வரிசையில் அமர்ந்திருக்குமு; ஒரு லிபரல் எம்.பி. தனது கட்சியின் தலைமையை விமர்சிக்க அல்லது நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டத்தை விமர்சிக்க ஒருசெய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளார் என்பதும் பிரதமருக்கு அவமரியாதைக்குரிய ஒன்றாகும்’ என்றும் ஜக்மிட் சிங் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் “கனடா முழுவதும் உள்ள உள்ளூர் குடிமக்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன் வரிசை ஊழியர்கள் சேவையாளர்கள் ஆகியோர் தங்கள் சமூகத்தில் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு தாக்கப்படுகிறார்கள். இன்று ஒரு லிபரல் எம்.பி.யும் முன்னாள் பாராளுமன்ற செயலாளரும் ஒட்டாவா மாநகரில் தோன்றியுள்ள நெருக்கடியை தனது சொந்த அரசாங்கம் கையாள்வதை விமர்சனம் செய்வதைப் பார்த்துள்ளோம்.தாக்குவதைக் கேட்கிறோம், “ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கே தங்கள் சொந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது என்றால் மற்றைய கட்சிகளை ஆதரிக்கும் பொதுமக்கள் எப்படி நம்பிக்கை வைப்பார்கள்? இந்த நெருக்கடியின் தொடக்கத்திலிருந்தே, பிரதமர் மற்றும் அவரது குழுவினரின் தலைமையின் குறைபாடுகள் வெளியே தெரியவந்துள்ளது . கனேடியர்களுக்கு உதவும் தீர்வுகளை விட அவர்கள் செயல்படாமல் இருப்பதற்கான காரணங்களை அரசாங்கத்த்தின் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகம் தேடுகிறார்கள்.’ என்றார்.
இவ்வாறான நிலையில் கனடிய பாராளுமன்றத்தின் ஆளும் லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கோவிட்-19 சுகாதாரக் கட்டுப்பாடுகள் தொடர்பாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன்ர முரண்பட்டுக் கொண்டுள்ளார் என்று அறியப்படுகின்றது, ஏனெனில் அரசாங்கம் “சுதந்திர ஊர்வலம்” என்று அழைக்கப்படும் ஆர்ப்பாட்டத்தை எதிர்கொண்டு, கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக நாட்களையும் ஒட்டாவாவின் வளங்களையும் வீணடித்துள்ளது. .
லூயிஸ்-ஹெபர்ட்டின் கியூபெக் நகர தொகுதிக்கான் பாராளுமன்ற உறுப்பினர் ஜோயல் லைட்பவுண்ட் நேற்று செவ்வாயன்று, தொற்றுநோய்க்கான சுகாதார நடவடிக்கைகள் அகற்றப்பட வேண்டும் என்று விரும்பும் மக்களின் கவலைகளை அரசாங்கங்கள் நிராகரிக்கவோ அல்லது முட்டாள்த் தனமாக நிராகரிக்கவோ கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.
“கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது – மற்றும் அதன் போது – எனது அரசாங்கத்தின் தொனியும் கொள்கைகளும் கடுமையாக மாறிவிட்டன என்பதை என்னால் வருத்தத்துடன் கவனிக்கக் கூடியதாக உள்ளது,” என்று ஓட்டாவா மாநகரில் நடத்திய சந்திப்பு ஒன்றில் செய்தியாளர்களிடம் லூயிஸ்-ஹெபர்ட்டின் கியூபெக் நகர தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர்
கூறினார்.
தொற்றுநோய்க்கான சுகாதாரக் கட்டுப்பாடுகள் குறித்த தமது மத்திய அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து லைட்பவுண்ட் கவலை தெரிவித்தாலும், ஒட்டாவாவில் உள்ள கனரக வாகன ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேறுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார், மேலும் எதிர்ப்புக்களைக் காட்டும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவிர வலதுசாரிப் போக்குக் கொண்ட வெறுப்பு மற்றும் இருப்பின் அடையாளங்களைக் கொண்டவர்களாக உள்ளதையும் அவர் கண்டித்தார்.
மேலும் அவர் செய்தியாளர்களோடு பேசுகையில்” ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சில எதிர்ப்பாளர்கள் குரல் கொடுக்கும் அவர்களது கோரிக்கைகள் மற்றும் கவலைகள் நியாயமானவை என்றும் . குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீது சமூக தனிமைப்படுத்தலின் மனநல பாதிப்புகள் மற்றும் வர்த்தக நிலையங்களை தொடர்ந்தும் பூட்டுதல்களின் பொருளாதார தாக்கங்கள் பற்றிய கவலைகளை அவர் மேற்கோள் காட்டினார்.