மன்னார் நிருபர்
(08-03-2022)
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கும் மன்னார் மாவட்ட மட்ட தொழில் சங்கத்திற்கு மிடையிலான விசேட சந்திப்பு நேற்று திங்கட்கிழமை(7) மாலை நடைபெற்றது.
இதன் போது உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி பேசப்பட்டது.
கடந்த 2021/02/07 ஆம் இடம் பெற்ற சந்திப்பின் போது முன்வைத்த கோரிக்கை பற்றியும் ஆராயப்பட்டது.
மேலும் முன்வைத்த கோரிக்கை பற்றியும் ஆராய படுவதாக பணிப்பாளர் நாயகம் வாக்குறுதிகளை வழங்கினார்.
இதன் போது சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளரும் கலந்து கொண்டார்.
பணிப்பாளரின் வருகையின் பின்பு மன்னார் மாவட்டத்தில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தேசிய ரீதியாக பல வெற்றிகளையும் பெற்ற விடயத்தை பணிப்பாளர் நாயகத்திற்கு முன் வைத்தனர்.
இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. என்பது குறிப்பிடத்தக்கது.