(26-04-2022)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ராஜபக்ஷ குடும்பத்தின் ஏனைய உறுப்பினர் களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (25) இரவு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கலந்துரையாடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது.
நாட்டில் நிலவும் பாரிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங் கத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகவும் இந்தக் கலந்துரையாடல் நேற்று நள்ளிரவு வரை நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.