மன்னார் நகர பை உறுப்பினருமான எஸ்.ஆர்.குமரேஸ்
(மன்னார் நிருபர்)
(08-07-2022)
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி என்கின்ற வகையில் நாமும் இந்த போராட்டங்களுக்கு ஆதரவு செலுத்தி கோட்டபாய அரசையும்,கோட்டாபய ராஜபக்ஸவையும் வீட்டிற்கு அனுப்புவதன் ஊடாகவே இக்கட்டான சூழலுக்கு ஒரு இடைக்கால தீர்வு வரும் என் கின்ற நம்பிக்கையில் இந்த போராட்டத்திற்கு பூரண ஆதரவை நாங்கள் மாத்திரம் இன்றி அனைவரும் வழங்க வேண்டும் என்பது இலங்கையர் அனைவரினதும் கடமையாகவும் எதிர்பார்ப்பதாகவும் உள்ளது என ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளரும்,மன்னார் நகர பை உறுப்பினருமான எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்தார்.
அவர் இன்று வெள்ளிக்கிழமை (8) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
இலங்கை திரு நாடானது இன்று அழிவு நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றது.குறிப்பாக விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மீனவர்கள் மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மாணவர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
-இவ்வாறு மக்கள் எதையும் செய்ய முடியாத நிலையில் மிகவும் ஆபத்தான சூழல் உருவாகி உள்ளது.
-அந்த அடிப்படையில் இன்று அந்த சூழலை உருவாக்குவதற்கு காரண கர்த்தாவாக இருந்த இந்த அரசும் தற்போதைய ஜனாதிபதியும், பிரதமர் மற்றும் ஆட்சியாளர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக தமது பதவிகளிலிருந்து இராஜினாமா செய்து மக்களின் நல்வாழ்வுக்காக இவர்கள் வீடு சென்று புதிய இடைக்கால சர்வ கட்சிகளைக் கொண்ட நிர்வாக அலகை, ஓர் அரசை அமைப்பதன் ஊடாக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு ஓரளவேனும் ஒரு தீர்வை பெற்றுக் கொள்ள முடியும்.
அந்த வகையில் ஜனாதிபதி அவர்கள் தொடர்ந்தும் விடாப்பிடியாக தான் வீடு செல்ல மறுத்து கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இன்று ஒட்டுமொத்த இலங்கை மக்களும் இணைந்து தற்போதைய போராட்டங்களில் இணைந்து இருக்கிறார்கள்.
-அதன் அடிப்படையில் தமிழ் மக்கள் முற்று முழுதாக இந்த போராட்டங்களை ஆதரித்து நிற்கின்றார்கள்.
தமிழ் மக்களை பிரதி நிதித்துவப்படுத்துகிற கட்சி என்கின்ற வகையில் நாமும் இந்த போராட்டங்களுக்கு ஆதரவு செலுத்தி கோட்டபாய அரசையும்,கோட்டபாய ராஜபக்ஸவையும் வீட்டிற்கு அனுப்புவதன் ஊடாகவே இக்கட்டான சூழலுக்கு ஒரு இடைக்கால தீர்வு வரும் என் கின்ற நம்பிக்கையில் இந்த போராட்டத்திற்கு பூரண ஆதரவை நாங்கள் மாத்திரம் இன்றி அனைவரும் வழங்க வேண்டும் என்பது இலங்கையர் அனைவரினதும் கடமையாகவும் எதிர்பார்ப்பதாகவும் உள்ளது.
-அந்த வகையில் போராட்டங்கள் வெற்றி பெறுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
-குறிப்பாக பொருளாதார நெருக்கடியில் இருந்து நாம் மீள வேண்டுமாக இருந்தால் புலம்பெயர் தேசத்தில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களின் பங்களிப்பு மிக மிக அவசியமாக உள்ளது.
வெறுமனவே புலம் பெயர் தமிழர்கள் இலங்கையில் தமது அபிவிருத்திகளை மேற்கொள்ளுவதற்கு இலங்கை அரசாங்கத்தை நம்பி அவர்கள் சிறிதேனும் முயற்சிகளை மேற்கொள்ள மாட்டார்கள்.
அவர்கள் தமிழ் பிரதேசங்களில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமாக இருந்தால் இங்கே மாகாண சபை உருவாக்கப்பட வேண்டும்.
மாகாண சபைக்கான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
புலம் பெயர் தேசத்தில் இருந்து வரக்கூடிய நிதிகளை மாகாண சபை கையாளக்கூடிய ஒரு சூழலை உருவாக்க வேண்டும்.
அதற்கு வர இருக்கின்ற சர்வ கட்சி அரசு துணையாக இருந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக வேண்டி மாகாண சபைக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டு அதன் ஊடாக புலம்பெயர் மக்களின் நிதிகள் இங்கே கொண்டு வரப்பட்டு அபிவிருத்திகள் ஆரம்பிக்கப்பட்டு இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு மாகாண சபை அதிகாரங்கள் எமக்கு உதவியாக இருக்கும்.
-அடிப்படையில் மாகாண சபை தேர்தல் நடாத்தப்பட வேண்டும்.அதன் ஊடாக பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு எட்டப்படும்.
அதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்ள முடியும்.தற்போது நாட்டில் இடம் பெற்று வருகின்ற போராட்டங்கள் தமிழர்கள் ஆதரவு வழங்குவதா? அல்லது தமிழ் கட்சிகள் ஆதரவு வழங்குவதா? என்கிற விவாதங்களுக்கு அப்பால் உண்மையில் கோட்டாபாய ராஜபக்ஷ வீடு செல்ல வேண்டும்.
போராட்டங்கள் வெற்றி அளிக்கப்பட வேண்டும்.அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
தமிழர்களின் பிரச்சினையை வர இருக்கின்ற அரசாங்கம் உணர்ந்து கொண்டு நாட்டு நிலைமை ஓரளவேணும் முன்னேற்ற கரமாக கொண்டு செல்லும் போது தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அணுகுவது,காத்திரமான தீர்வுகளை முன் வைப்பது மற்றும் குரல் கொடுப்பது என்பது சாத்தியமானதாக அமையும்.
-அதனை விடுத்து இப்போது நாங்கள் நெருக்கடிக்கு அப்பால் ஆதரவு வழங்கத் தேவையில்லை.
அது எமக்கு தேவையற்ற விடயம் என்ற எண்ணப்பாடு ஒட்டுமொத்த இலங்கையை மாத்திரமல்ல தமிழர்களையும் ஒட்டு மொத்தமாக அழிவு பாதையில் இட்டுச் செல்லும் என்பது உண்மை.என அவர் மேலும் தெரிவித்தார்.