எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் ஆடி அமாவாசை விரதத்தை வீதியில் முடித்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
இந்த சம்பவம் யாழ் பருத்தித்துறை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
எரிபொருள் நெருக்கடியால் நாடாள ரீதியில் Q.R. அட்டையின் மூலம் வாகன இறுதி இலக்க அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றன.
எனினும் எரிபொருள் நிலையத்துக்கு அருகாமை அதிகளவான வாகனங்கள் .
இந்நிலையில் இன்றைய தினம் எரிபொருள் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த ஒருவர் தமது ஆடி அமாவாசை விரதத்தை வீதியில் முடித்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.