“அக்கரை சீமை” எனக் கூறப்படும் பெரிய பிரித்தானியா போன்ற பல்லினப் பண்பாடுகளை Multi Cultural அங்கீகரித்து ஆதரவளித்து அவற்றின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும் மேற்குலக நாடுகளில் தமிழரின் பரம்பலும் அவர்களின் தாய் மொழியான தமிழ், சைவம் அவை சார்ந்த பண்பாடும் அண்மைக் காலங்களில் மிகத்துரிதமாக வளர்ந்து வருகின்றன. 1950 இன் முன் அவற்றினை முன்னெடுப்பதற்கான மேற்படி துறை சார் அறிவும் ஆற்றலும் ஆளுமையும் மிக்க செயற்பாட்டாளர்களோ அல்லது நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புக்களோ இல்லாதிருந்த அந் நாடுகளில் 1960-70-களில் உயர்கல்வி நோக்கில் மிகக்குறைந்த எண்ணிக்கைஜயினராகப் பெரிய பிரித்தானியா போன்ற மேற்குலக நாடுகளில் குடியேறிய ஈழத்தமிழர்கள் தாம் சென்ற நோக்கினை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தபின்னர் இந்நாட்டினையே தம் நிரந்தர வாழிடமாகவும் ஆக்கிக்கொண்டு அங்கொருவர் இங்கொருவராகவும் வாழ்ந்து வந்தனர் 1980 களைத் தொடர்ந்து தாய் நாட்டில் உருவான அசாதாரண சூல்நிலை காரணமாகத் தம் சொந்த நாட்டிலிருந்து குடிபெயர்ந்த பெருமெண்ணிக்கையினரான தமிழர்களில் கணிசமானோர் பெரிய பிரித்தானியாவுக்கு வந்து சேர இங்கு நிரந்தரமாகக் குடியமர்ந்த ஈழத்தமிழர் தொகை படிப்படியாக அதிகரித்தது. அவர்களில் தம் தாய் மொழியிலும் கலை பண்பாட்டுத் துறைகளில் அறிவும் உறுதியான பற்றும் கொண்ட சிலர் அவற்றினை தாம் குடியேறிய நாடுகளிலும் முன்னெடுக்க முயசித்தனர். குறிப்பாக வருங்காலச் சந்ததியினர் தம் தாய்மொழி, கலைகள் ஆகியவற்றின் அதி சிறப்புக்களைக் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற பெரு நோக்குடன் அவற்றினை வளர்ப்பதற்கும் பேணுவதற்குமான செயற்பாடுகளைத் திட்டமிட்டு மிக முனைப்புடன் மேற்கொண்டனர். அவ்விதம் முன்னோடிகளாக முன்னின்று செயலாற்றிய தீர்க்கதரிசனம் மிக்கச் செயற்பாட்டாளர்களால்தான் இன்று பெரிய பிரித்தானியா போன்ற மேற்குலக நாடுகளில் தமிழ், சைவம் அவை சார்ந்த இசை, நடனம், நாடகம், கோவிலை மையப்படுத்திய ஆன்மீக பண்பாட்டு மரபுகள் ஆகிய யாவும் சிறப்பாக வளர்ந்து வருகின்றமையினை நேரில் காணக்கூடியதாகவிருக்கின்றது.
அவ்வாறான சிறப்பிற்குரிய முன்னோடிகளில் ஒருவரும் யாழ்ப்பாணம் சித்தன்கேணியைச் சேர்ந்தவரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இரசாயனவியல் விரிவுரையாளராகக் கடமையாற்றியவரும் அறுபதுகளில் புலமைப்பரிசில் பெற்றுப் பெரிய பிரித்தானியப் பல்கலைக்கழகமொன்றில். இரசாயனத் துறையில் கலாநிதியாக உயர் தகமை பெற்றவரும் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஐக்கிய இராஜ்யத்தில் நிரந்தரமாக வாழ்ந்துகொண்டு சமூகநலனோம்பு சேவைகள் பல மேற்கொண்டு வருபவருமான இரத்தினம் நித்தியானந்தன் குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒருவர் “Dr.நித்தி” என இலண்டன் வாழ் தமிழ் மக்களால் நன்கறியப்பட்டவரான கலாநிதி நித்தியானந்தன் தனிமனிதனாக ஆனால் ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனமொன்றிற்கு இணையாக -நிகராக அவர் மேற்கொண்டு வரும் சமூக நலத் தொண்டுகளால் பயனடைபவர்கள் இங்கும் குறிப்பாகத் தாய்நாட்டிலும் மிகப்பலர்.
தனது தொழில், குடும்ப வாழ்க்கை என்ற தன் சொந்தப் பொறுப்புகளுக்கு மேலாகத் தனது நேரத்தின் கணிசமான பகுதியினை ஒதுக்கித் தான்சார்ந்த சமூகத்திற்கும் பயன்படும் வகையில் “Ratnam Foundation”– என்ற தர்ம அமைப்பின் -Charity Organization- ஊடாக அவர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் பணிகள் கனதியானவை -காத்திரமானவை. -மிக குறிப்பாக வாய்ப்பு வசதிகளில் மிகமிக பின்தங்கிய தாய் நாட்டுச் சிறார்களை இனங்கண்டு அவர்களின் கல்வித்தரத்தை நவீன கணனியுகத்திற்கேற்ப உயர்த்துவதே மிகச்சிறப்பானது மட்டுமன்றிக் காலத்தின் கட்டாயமாகுமென அடிக்கடி கூறும் அவரின் நோக்கும் போக்கும்.
“…..அன்னயாவினும் புண்ணியம் கோடி அங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”. என்ற மகாகவி பாரதியாரின் கவிதை அடிகளைத்தான் நினைவிற்குக் கொண்டுவரும.; பொதுவாகச் சமூக நலத்தொண்டுகளும் சிறப்பாக வரும்கால நற்பிரசைகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்குடன் சேவையுணர்வோடு திட்டமிட்டுச் செயலாற்றிவரும் நித்தியானந்தன் தன் சுய வாழ்க்கை – Auto biography – பற்றி அண்மையில் அவரால் எழுதப்பட்ட நூல் வாசிக்க கிடைத்தது. “KUDIL and the HEADMASTER” என்ற ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்நூல் பதிப்புத் துறையில் முன்னணியில் விளங்கும் குமரன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 120 பக்கங்களை கொண்ட அந்நூல் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு அணிந்துரை – ஏற்புரை ––Acknowledgements- – அறிமுகம் –introduction– என ஆரம்பித்து 16 தலைப்புக்களில் தனது சுய வாழ்க்கை தொடர்பாகக் கூறப்படவேண்டிய விடயங்களை மிகத் தெளிவாகவும் விளக்கமாகவும் வாசிப்பவரை மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டும் வகையில் கதை சொல்வது போல் ஓரொழுங்கில் எழுதியுள்ளதனூடாகத் தான் சிறந்தவொரு நூல் எழுத்தாளரென்பதனை இந் நூலாசிரியர் வெளிக்காட்டியுள்ளார் தனது உயர் நிலைக்கு வித்திட்ட தனது பெற்றோருக்குச் சமர்ப்பணம் செய்துள்ள இந்த நூலின் ஏற்புரையில் -“helping people gives me great pleasure”- சக மக்களுக்கு உதவுவது தனக்கு மகிழ்வைத் தருவதாகக் குறிப்பிட்டிருக்கும் ஆசிரியர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாகச் சமூகத்திற்குப் பயன்படும் சேவைகளை தான் தொடர்ச்சியாக மேற்கொண்டமை பற்றி இலண்டன் தமிழ் முதியோரில்லம், Sunrise Radio என்ற பெயரில் ஒலிபரப்புச் சேவை, தமிழிலக்கியம், தமிழர் நுண்கலைகள் பற்றி அறிஞர்களால் எழுதப்படும் நூல்களைப் பதிப்பித்தல், தாய் நாட்டில் சுகாதார, கல்வி வசதிவாய்ப்புக்களை அபிவிருத்தி செய்தல் என பல தலைப்புகளில் விபரமாகப் பதிவு செய்துள்ளார். எனினும் தனது நூலிற்கு “குடில் தோற்றுவித்த தலைமையாசிரியர”; “KUDIL and the HEAD MASTER” எனப் பெயரிடப்பட்டிருப்பதன் மூலம் தான் மேற்கொண்ட சேவைகள் அனைத்திலும் இலண்டனில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட –ஜ1978ல்ஸ மேற்கு லண்டன் தமிழ் பாடசாலையின் -WEST LONDON TAMIL SCHOOL-[1993 லிருந்து “LONDON TAMIL CENTER” என பெயர் மாற்றம் பெற்றது.)
தலமையாசிரியராக 1982-2012 வரை சுமார் 30 ஆண்டுகளாக ஆற்றிய கல்விப் பணியினையே சிறந்ததாகவும் உயர்ந்ததாகவும் விதந்து குறிப்பிட்டுள்ளார். ஆங்கில மொழி மயப்பட்ட மேலைத்தேச நாட்டில் தமிழ் மொழிக் கல்வியை முன்னெடுக்க மேற்கொண்ட செயற்பாடு ஆழ்ந்த கவனிப்புக்குரியது. இலக்கிய, இலக்கண வளம் நிறைந்ததும் தொடர்ச்சியான மிக நீண்ட வளர்ச்சி வரலாறு கொண்டதுமான விரல்விட்டெண்ணக்கூடிய செம்மொழிகளுள் -Classical Language- ஒன்றெனச் சர்வதேச மொழியாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ்மொழிக்குச் சொந்தக்காரர்களான தமிழினம் அண்மைக்காலங்களில் தம் மொழி நிலைபெற்று வளர்ந்த தம் தாய்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து வளம் மிக்கச் செல்வந்த நாடுகளில் குடியமர்ந்து வாழ்கின்றனர். அதுவும் உலகில் மிகச் செல்வாக்குள்ள -உலகின் மூலைமுடுக்கெல்லாம் பேசப்படுகின்ற -அறிவியல் மொழியாக வளர்ந்துள்ள உலக அரங்கில் சர்வதேச மொழியாக அங்கீகரிக்கப்படுள்ள ஆங்கில மொழிச் சூழலில் வாழவேண்டிய நிர்பந்தம் புலம்பெயர் தமிழர்களுக்கு மிகக் குறிப்பாக அவர்ககளின் சிறார்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. பெரிய பிரித்தானியா போன்ற நாடுகளில் மேலைத்தேயப் பண்பாட்டுச்சூழலில் பிறந்து ஆங்கில மொழியூடாகவே கல்வியுட்பட அனைத்துச் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வரும் எமது சிறார்கள் தம் முன்னோரின் அருந்தமிழ் மொழியை -அது போதிக்கும் பண்பாட்டுச்சிறப்புகளை -வாழ்வியல் விழுமியங்களை மறப்பதற்கான, புறம் ஒதுக்குவதற்கான வாய்ப்புக்கள் நிறையவே உள்ள பாதகமான சூழ்நிலையில் எம் மொழியையும் அதன் பண்பாட்டுச் சிறப்புகளையும் அறிந்து கொள்ளவும் ஓரளவிற்காயினும் வாழ்க்கையில் பின்பற்றி ஒழுகவும் தான் தலைமைதாங்கி நடாத்தும் இலண்டன் தமிழ் நிலையத்தினூடாக ஏதாவது உருப்படியாகச் சாதிக்க வேண்டுமென்ற நோக்குடைய Dr.நித்தியானந்தன் இலண்டனிலுள்ள ஏனைய தமிழ்ப் பாடசாலைகள் போல் வாரத்தில் ஒருநாள் ஞாயிற்றுக் கிழமையில் சிறார்களுக்குத் தமிழ், சைவம் ஆகிய பாடங்களைக் கற்பிப்பதுடன் நிறுத்திக் கொள்ளாது மேற்குறித்த பாடங்களைச் சிறிது ஆழ அகலமாகப் போதிப்பதற்கான திட்டங்களை ஒவ்வொன்றாக அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்த மிக முனைப்புடன் செயற்பட ஆரம்பித்தார்.
கல்விதான் ஒருவரை வாழ்க்கையில் மிக உயர் நிலைக்குக் கொண்டு செல்லும்,ஆகையால் ஒருவருக்கு நாம் கொடுக்கக்கூடிய மிகப் பெரிய கொடை கல்வியே” என்று பக்கம் 03லும் ‘லண்டணில் பல்கலைக்கழகப் பட்டக்கல்விக்கு நிகராகப் போதிக்கப்படும் ஒரு கல்வி நிறுவனமாக இலண்டன் தமிழ் நிலையத்தை உருவாக்குவதே தனது பெருவிருப்பம்’ என்று பக்கம் 49லும் குறிப்பிடும் நூலாசிரியர், அந்நிலையினை எய்துவதற்கு [That education
is the greatest gift we can pass on to others because the rewards are so great. ‘page 3. , “ 9 I
was passionate about making it the centre of academic excellence for Tamil Language and Fine
Arts education in London. “ page 49. ] அவர் மேற்கொண்ட கல்விச் செயற்பாடுகள் மிக மிகப் பயனுள்ளவை.
G.C.E. O/L , G.C.E. A/L வகுப்புகளுக்கான தமிழ்மொழிப் பரீட்சைகளை நடாத்தும் பரீட்சை நிலையமாக இலண்டன் தமிழ் நிலையத்தை அங்கீகரிக்குமாறு அப்பாடசாலையின் தலைமையாசிரியரால் தரத்தில் உயர்ந்த விரல் விட்டெண்ணக்கூடிய உலகப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் அப் பல்கலைக்கழகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டமையால் மேற்படி பரீட்சைகளுக்கு லண்டன் தமிழ் நிலையத்திலிருந்து தோற்றிய மாணவர்களில் பலர் “A” தரச் சித்தி பெற்றுச் சாதனைப்படைத்து வியப்பிலாழ்த்தியுள்ளனரெனப் பக்கம் 49-பந்தி 02ல் குறிப்பிட்டுள்ளார.;
G.C.E.A/L பரீட்சையில் விசேட சித்தி பெற்றவர்கள் தொடர்ந்து பல்கலைக்கழகப் பட்டக்கல்வியினைக் கற்றுயர வாய்ப்பாக சென்னைப் பல்கலைக்கழகத்துடன் தொடர்பை ஏற்படுத்தி அப் பல்கலைக்கழகம் நடாத்தும் B.A தமிழ்மொழி, B.Litt தமிழிலக்கியம் ஆகிய பாடநெறிகளுக்கு -Degree Course- இலண்டன் தமிழ்நிலைய மாணவர்கள் சேர்ந்து கற்கவும் பரீட்சைகளுக்குத் தோற்றவும் வசதியாக இலண்டன் தமிழ்நிலையத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிக் கற்கை நிலையமாக – – External study centre of university
of Madras -அங்கீகரிக்குமாறு கோரித் தலைமையாசிரியரால் சமர்ப்பிக்கப்படட விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்ட்து. இவ்வாறு இலண்டன் தமிழ் நிலையம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிக் கற்கை நிலையமாக அப் பல்கலைக்கழகத்தினால் அங்கீகரிக்கப்படடமை “மிகப் பெரிய சாதனை “A Very big
achievement” என்றே நூலில் விதந்து குறிப்பிட்டுள்ளார். இலண்டன் தமிழ் நிலைய மாணவர்கள் சென்னைப் பல்கலைகழகத்தின் மேற்குறித்த பட்டக் கல்விக்கான வகுப்புகளில் சேர்ந்து கற்று, குறித்த பரீட்சைகளுக்குத் தோற்றி சித்தி பெற்று வருகின்றனர். முதன் முதலாக 2012ம் ஆண்டில் B.Litt Degree in Tamil Literature – பரீடசையில் சித்தி பெற்ற மாணவரின் கடிதம் நூலின் பக்கம் 50ல் இணைக்கப்படுள்ளது. ஆங்கில மொழிச் சூழலில் பிறந்து வாழும் அந்த மாணவர் தன் மூதாதையர்களின் முத்தமிழ் மொழியில் அதி சிறப்புக்குரிய தகைமையினைப் பெற்று கொள்வதற்கு Dr.நித்தியானந்தனும் அவர் தலைமையாசிரியராகக் கடமையாற்றும் இலண்டன் தமிழ் நிலையமுமே காரணம் என்று பாராட்டியுள்ளார். இவ்வாறு தமிழ்மொழி , தமிழிலக்கியம் ஆகிய இயற்தமிழ்க் கல்வி மட்டுமன்றிக் கர்நாடக இசை, நடனம் ,நாடகம் ஆகிய முத்தமிழ்க் கல்வியும் சிறப்புற்று வளரவும் பெருங்கலை விழாக்களை மிகச்சிறப்பாக ஓழுங்கமைத்து மேடையேற்றுவதிலும் இலண்டன் தமிழ் நிலையம் அதன் தலைமை ஆசிரியர் Dr.நித்தியானந்தன் காலத்தில் சிறந்த பணி ஆற்றியுள்ளமையினை நூலின் 08,09ம் அதிகாரங்கள் சிறப்பாக விபரிக்கின்றன. இவ்வாறு இலண்டனில் புலம்பெயர் இளஞ்சிறார்களுக்கு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையில் தமிழ்மொழி, சைவம் கற்பிக்கும் நோக்குடன் 1977ல் ஆரம்பிக்கப்பட்ட இலண்டன் மேற்கு தமிழ்ப் பாடசாலையினை 50 மாணவர்கள் 8 ஆசிரியர்களுடன் Dr.நித்தி அதன் தலைமையாசிரியராக 1982ல் பொறுப்பேற்று ஏறக்குறைய 30 ஆண்டுகளாக அரும் பணியாற்றி 2012ல் ஓய்வு பெற்றுச் செல்லும் போது இளஞ் சிறார் வகுப்பு Nursery தொடக்கம் பல்கலைக்கழகப் பட்டக் கல்வி வகுப்பு -Degree level வரை 30 வகுப்பறைகளில் 450 இற்கு மேற்பட்ட மாணவர்களையும் கொண்டு இலண்டனிலுள்ள மிகப் பெரிய தமிழ்ப் பாடசாலையாக விரிவாகி உயர்ந்த கல்விப் பெறுபேறுகளைச் சாதிக்கும் கல்வி நிறுவனமாகச் சிறந்து விளங்கியது.
தமிழ்மொழிக் கல்வியில் மட்டுமன்றிக் கர்நாடக இசைக் கல்வி, வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளில் தேர்ச்சி பெற்றுப் புராண இதிகாசக் கதைகளை நாட்டிய நாடகங்களாகத் தயாரித்து ஆயிரம் இரசிகர்களுக்கு மேல் வசதியாக அமர்ந்து இரசிக்கக்கூடிய மண்டபங்கள் நிறைந்த இரசிகர்கள் முன்னிலையில் சிலப்பதிகாரம் விபரிக்கும் “இந்திரா விழா” எனத் தக்க வகையில் வருடா வருடம் மிகப் பெரிய கலை விழாக்களை நடாத்தி இலண்டன் வாழ் இசைப்பிரியர்களுக்கு கலை விருந்தளித்து இசை யின்பம் வழங்குவதில் இலண்டன் தமிழ் நிலையத்தின் நுண்கலைக் கல்லூரி -Academy of Fine Arts- பெரும்பணி ஆற்றியது. இவ்வாறு தாய்மொழிப் பற்றும் கலைத்துறையில் அறிவும் அவற்றினை நிரந்தர வாழிடமாகக் கொண்ட தான் வாழும் நாட்டிலும் வளர்க்க வேண்டுமென்ற பேரவாவுமுடைய அவரின் தலைமையாசிரியர் பதவிக் காலத்தில் இலண்டனில் வேறெந்தத் தமிழ்ப் பாடசாலையிலோ, நிறுவனங்களிலோ இல்லாத வகையில் தமிழ் மொழிக் கல்வியும் நுண் கலைகளும் ஒரு சேர இணைந்து வளர்ந்து சிறந்தன. தலைமையாசிரியராக Dr. நித்தி மேற்கொண்ட தீர்க்கதரிசனமான சில கல்விச் செயற்பாடுகளை நுணுகி நோக்கும் பொது இலங்கையிலோ அல்லது தமிழ்நாட்டிலோ வாழுகின்ற மாணவர்கள் தமது தாய்மொழியான தமிழ் மொழி இலக்கியங்களைக் கற்கும்போது குறிப்பாகக் கவிதைகளைப் பொருள் விளங்க உணர்ந்து கற்பது போலவே ஆங்கில மொழியை முதன் மொழியாகக் -First Language- கொண்ட இலண்டனில் வாழ்கின்ற தமிழ் மாணவர்களும் தமது மூதாதையர்களின் அருந் தமிழ் மொழியை அதன் இலக்கியங்களைக் கற்க வேண்டுமென்ற விருப்பத்தோடு கற்பதனாலும் G.C.E.A.L, படப்பிடிப்பு -Degree Course- என உயர்தரத்தில் கற்பதனாலும் எக்காலத்திலும் எச் சூழ்நிலையிலும் தமிழை மறக்கவோ புறமொதுக்கவோமாட்டார்கள், தாம் பெற்றுக்கொண்ட தமிழ் அறிவை மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் அடுத்த சந்ததிக்கும் எடுத்துச்செல்வார்கள்.
எனவே Dr.நித்தியின் இத் தமிழ்க் கல்விப் போதனையினை இலண்டனிலுள்ள ஏனைய தமிழ்ப் பாடசாலைகளும் முன்னுதாரணமாகக் கொண்டு தமிழ்மொழியை உயர்தரத்தில் கற்பிக்க முயன்றால் அவர்கள் கல்விகற்கும் முதல் மொழிக்கு –First Language- மேலதிகமாகக் கற்க விரும்பும் ஒரு மொழியாகத் தமிழ்மொழியினையும் போதிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்த முடியும். இத்தகைய வாய்ப்பினைப் பயன்படுத்தித்தான் இலண்டன் தமிழ் நிலையத்தைச் சேர்ந்த மாணவர்கள் G.C.E.A.L, தமிழ்மொழி, B.Litt, தமிழிலக்கியம் – சென்னைப் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை மேற்கொண்டு சித்தி பெற்றுச் சாதனை படைத்து வருகின்றனர்.
இவ்வாறு கல்வியினூடாக வாழ்க்கையில் உயர்வது தொடர்பில் முத்துமுத்தான நல்லாலோசனைகளையும் இடையிடையே சுவைபட விபரித்து நூலை நகர்த்திச் செல்வதனால் நூலை விரித்தால் வாசித்து முடித்துவிட வேண்டுமென்ற ஆவலைத் தூண்டும் இந்நூலின் ஓரிடத்தில் தான் தன் இளைமைக் காலத்தில் கல்வியில் பெரிதாகச் சாதிக்கவில்லை என்றும் -பக்கம் 10ல் குறிப்பிடும் ஆசிரியர் உலகத்திலேயே மிகத் தரமுயர்ந்த பல்கலைக்கழகமொன்றில் -இலண்டன் பல்கலைக்கழகத்தில் இரசாயன விஞ்ஞானத்துறையில் ஆய்வு மேற்கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்றுக் கொள்ள முடிந்த தென்றால் கல்வியில் உயர்நிலை எய்த வேண்டுமென்ற தீர்க்கமான தீர்மானமும் அதனைச் சாதிக்க மேற்கொண்ட கடின உழைப்புமே தன்னைக் கல்வியில் அந்த உயர்நிலைக்குக் கொண்டு சென்றதாகவும் விபரிக்குன்றார் ………………………………… எனவே இன்றைய இளஞ் சந்ததியினர் வாழ்க்கையில் உயர வேண்டுமெனக் கனவு காண்பதுடன் அக்கனவைச் சாதித்தே தீரவேண்டுமென்ற மன உந்தலுடன் செயலாற்றினால் நிட்சயமாகச் சாதிக்கலாம் என்றும் -பக்கம் 94ல் முடிவுரையில் -கூறி வாசிபோருக்கு உந்து சக்தியைக் கொடுக்கும் வகையில் மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ள “குடில் தோற்றுவித்த தலைமையாசிரியர்” “Kudil and the Head Master” என்ற இந்த நூல் போட்டி நிறைந்த சூழலும் வாய்ப்பு வசதிகளும் மிக்க இன்றைய கல்வி உலகிற்கு வழிகாட்டக்கூடிய பயன்படக்கூடிய வகையில் சாதனையாளர் ஒருவரால் இரத்தினச் சுருக்கமாக எழுதப்பட்ட சிறந்த சுயசரிதை நூலென இந்நூலை விதந்து குறிப்பிடலாம்.
மு.க.மாசிலாமணி