தாய்லாந்து பாராளுமன்றத்தை அந்நாட்டின் பிரதமர் பிரயுத் சான் – ஓசா (Prayuth Chan-ocha) இன்று கலைத்துள்ளார். இதன்படி, எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டது. தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு பின்னர் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மே 7 ஆம் திகதிக்கும் 14 ஆம் திகதிக்கும் இடையில் தேர்தல் நடப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.