ஆபாசப்பட நடிகையுடன் தான் கொண்டிருந்த முறையற்ற தொடர்பை மறைப்பதற்காகப் பணம் கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த விசாரணைகளுக்கு முன்பும் பின்பும் அமெரிக்காவின் நியுயோர்க் நகரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயோர்க்கில் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு ட்ரம்ப் விடுவிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
. அமெரிக்க ஜனாதிபதிகளாகப் பதவி வகித்தவர்களில் குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்ட முதல் நபர் டொனால்ட் ட்ரம்ப்தான். என்ற பெயர் அவருக்கு கிட்டியுள்ளது அந்த வகையில், நீதிமன்றத்தில் ட்ரம்ப் ஆஜரான அந்த 57 நிமிடங்களும் அமெரிக்க அரசியல் வரலாற்றில், கருப்புப் பக்கங்களாகப் பதிவாகியுள்ளன என்றும் உலகின் நாலா பக்கங்களிலும் இருந்து அரசியல் விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.
இதேவேளை, டிரம்ப் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக கைரேகைகள் பதிவு செய்யப்படுவதுடன், அவரை புகைப்படம் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், விசாரணையினை தொடர்ந்து டிரம்ப் சட்ட அமுலாக்கப் பாதுகாப்பில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் மோசமான சொல்லாடல்களையும், வார்த்தை பிரயோகங்களையும் விரக்தியில் செய்துவிட்டார் என்று நியாயப்படுத்தும் உங்களை வாதங்களை ஏற்க முடியாது என்று நீதிபதி மெர்ச்சான் கூறியுள்ளார்.
அவதூறு பேச்சு கூடாது என்ற எனது முந்தைய எச்சரிக்கை ஒரு வேண்டுகோள்தான், உத்தரவு இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, இந்த விவகாரம் மீண்டும் எழுந்தால் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் என்று எச்சரித்தார்.
ட்ரம்ப் மீதான வழக்கின் நீதிமன்ற நடைமுறைகள் சுமார் ஒரு மணி நேரம் நீடித்துள்ளன. ட்ரம்ப் தனது இருக்கையில் இருந்து எழுந்ததுமே ரகசிய காவல் படையினர் அவரை சூழ்ந்து கொண்டனர்.
ட்ரம்ப் தனது வழக்கறிஞர்களிடம் சன்னமான குரலில் மெதுவாகப் பேசினார். இதனால், சற்று தொலைவில் அமர்ந்திருந்த பத்திரிகையாளர்களால் அவர் என்ன பேசினார் என்பதைக் கேட்க முடியவில்லை.
நீதிமன்றத்தின் மையத்தில் இருந்த நடைபாதை வழியே நடந்து சென்று பின் வாசல் வழியே ட்ரம்ப் வெளியேறினார். வெளியே நின்றிருந்த ஊடகத்தினரிடம் அவர் எதையும் பேசவில்லை.அவர் மிகவும் இறுக்கமாகக் காணப்பட்டுள்ளார்
செவ்வாய்கிழமை இடம் பெற்ற நீதிமன்ற விசாரணைகள் தொடர்பாக விபரித்துள்ள ஊடகவியலாளர்கள் சிலர் பின்வருமாறு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதிகள், முன்னாள் ஜனாதிபதிகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் இரகசியக் காவல் படையினர் புடைசூழ நீதிமன்றத்திற்கு வந்த ட்ரம்ப், வழக்கமான நீலநிற கோட்டும், சிவப்பு நிற டையும் அணிந்திருந்துள்ளார்.
நீதிமன்றத்திற்குள் நுழையும் போதே சற்று மந்தமாகக் காணப்பட்ட ட்ரம்ப், தனக்காகக் காத்துக் கொண்டிருந்த வழக்கறிஞர்களை நோக்கி மெதுவாக நடந்து சென்றுள்ளார்.
அங்கே, ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்திக்கவே இல்லை. அவரது உடல் மொழி மற்றும் முக பாவனைகள் பெரிய அளவில் எதையும் வெளிப்படுத்துவதாக இல்லை.
ட்ரம்ப் முன்னிலையாவதைச் செய்தியாக்குவதற்காக அங்கே கூடியிருந்த பத்திரிகையாளர்கள் தொலைபெசிகள் மற்றும் மடிக்கணினிகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படவில்லை.
அத்துடன், அன்றைய நீதிபதி ஜூவான் மெர்ச்சான் நீதி மன்றத்தில் தனது இருக்கைக்கு வந்ததும் ட்ரம்ப் உட்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளனர்.
நீதிமன்றத்திற்கு வெளியே அரசியல் மற்றும் ஊடக வெளியில் மிகவும் பரபரப்பாக இந்த வழக்கு பேசப்பட்டாலும், வழக்கைக் கையாறும் நீதிபதி மெர்ச்சான் ஒருபோதும் குரலை உயர்த்திப் பேசவே இல்லை.என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நீதிபதி மெர்ச்சான் வெகு நிதானமாக வழக்கைக் கையாண்டார். வழக்கறிஞர்களுக்கான காலக்கெடு, அடுத்த விசாரணைக்கான தேதி நிர்ணயம் போன்ற வழக்கமான நீதிமன்ற நடைமுறைகளாகவே அது அமைந்தது.
அரசியல் அரங்கில் வெகு ஆடம்பரமாக, ஆரவாரிக்கக் கூடியவரான ட்ரம்ப் நீதிமன்றத்தில் ஒரு சில வார்த்தைகளையே பேசியுள்ளார். அத்துடன் தனது கவலையையும் கோபத்தையும் தவிர்த்து மரியாதையாக நடந்து கொண்டார் என்றும் நீதி மன்றத்திற்குள் இருந்த சில வழக்கறிஞர்கள் தங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ட்ரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசிக்கையில் ட்ரம்ப், “நான் குற்றம் செய்யவில்லை” என்று மட்டுமே பதிலளித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் நீதிபதி மெர்ச்சான், வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளின் போதும் நீங்கள் நேரில் வர அனுமதி உண்டு என்பதை ட்ரம்பிடம் நினைவூட்டினார்.
நீங்கள் இதைப் புரிந்து கொண்டீர்களா என்று நீதிபதி கேட்க, ட்ரம்ப் “ஆம்” என்று ஒரே வார்த்தையில் பதிலுரைத்துள்ளார்.
நீதிமன்றத்திற்குள் கட்டுக்கடங்காமல் அல்லது விசாரணையைச் சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டால், விசாரணையில் முன்னிலையாவதற்கான உரிமையை இழக்க நேரிடும் என்றும் நீதிபதி மெர்ச்சான் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப் மிரட்டல் விடுக்கும் வகையில் சமூக ஊடகங்களில் செய்திகளைப் பதிவிட்டார் என்று குற்றம்சாட்டிய அரசு தரப்பு வழக்கறிஞர், “என் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டால் உயிரிழப்பும் மற்றும் பேரழிவுமே மிஞ்சும்” என்று குறிப்பிட்டு அவர் பதிவிட்ட ஒரு சமூக ஊடகப் பதிவைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
தன் மீதான குற்றச்சாட்டுகள் ஒரு மிகப்பெரிய அநீதி என்று நம்பும் ட்ரம்ப், மனம் நொந்துபோய் அவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம் என்று ட்ரம்ப் தரப்பு வழக்கறிஞர்கள் பதிலளிக்கையில் நீதிபதி மெர்ச்சான் அதற்கு மறுப்புத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நீதிமன்றிலிருந்து வெளியேறி சிறப்பு விமானத்தில் புளோரிடா பயணமாகியுள்ளதாகவும் அறியப்படுகின்றது இந்நிலையில் அவர் மீதான வழக்கு விசாரணைகள் டிசம்பர் 4ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஆபாசப்பட நடிகைக்கு தேர்தல் நிதியினை வழங்கிய குற்றச்சாட்டில் டிரம்ப் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,டொனால்ட் டிரம்ப் எதிரான 34 குற்றச்சாட்டுகளையும் உள்ளடக்கி முத்திரையிடப்பட்ட குற்றப்பத்திரிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன், அவர் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள 34 குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் குற்றவியல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் முதல் அமெரிக்க முன்னாள் ஜனாபதி என்ற பெயரை டொனால்ட் டிரம்ப் பெற்றுள்ளார்.