அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள ரிச்மண்ட் என்ற பகுதியில் பல்வேறு பொருட்களை மறுசுழற்சி செய்யும் ஆலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இண்டியானா பொலிஸ் என்ற பகுதியில் இருந்து 70 மைல் தொலைவில் உள்ள ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால், பயங்கர கரும்புகை வெளியேறியது. இதனால் அந்த ஆலைக்கு அருகில் வசித்த 2 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
பெரும்பாலும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் அந்த ஆலையில் இருந்ததால், ஆலையைச் சுற்றி வசித்தவர்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டதா என்று மருத்துவக்குழுவானர் ஆய்வும் செய்தனர். ஆலையைச் சுற்றி அரை கிலோமீட்டர் தூரத்துக்கு மீட்புக் குழுவினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இடத்தை கொண்டுவந்துள்ளனர்.