இஸ்ரேலில் நீதித்துறையில் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்தும் போராட்டம் 17ஆவது வாரத்தை எட்டியுள்ளது. டெல் அவிவ் நகரில் குவிந்த போராட்டக்காரர்கள் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
டெல் அவிவ் நகர் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராடினர். தம்மீதான புகார்களை ரத்து செய்யும் வகையில் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு சட்ட விதிகளை மாற்றி வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நகரின் முக்கிய பகுதிகளில் குவிந்த போராட்டக்காரர்களால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனிடையே அதிபர் கொண்டுவந்துள்ள புதிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாகவும் ஆயிரக்கணக்கானோர் ஜெருசலேமில் போராட்டம் நடத்தினர். பலதரப்பு அழுத்தத்தையும் பொருட்படுத்தாத இஸ்ரேல் அதிபர், தனது முடிவில் உறுதியாக இருப்பதால் அங்கு தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.