உதவியாளருக்கு நீண்ட காலமாக ஊதியம் தராமல் அமைச்சர் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால், குறிப்பிட்ட ஒரு பாதுகாவலர் அதிருப்தியில் இருந்துள்ளார். அமைச்சர் வீட்டில் இருந்தபோது அவரிடம் சம்பளம் குறித்து பாதுகாவலர் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாதுகாவலர் அமைச்சரை சுட்டுக்கொன்றார்.
இந்த சம்பவத்தில், தாக்குதல் நடத்திய நபரின் அடையாளங்கள் உடனடியாக வெளியாகவில்லை. கடந்த 2021ஆம் ஆண்டும் இதே பாணியில் பாதுகாவலர் ஒருவர் சுட்டதில், கம்பாலா பகுதியில் அரசுத்துறை அதிகாரி ஒருவரின் மகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.