பு.கஜிந்தன்
இலங்கை கடற்தொழிலாளர்கள் மூன்று பேர் படகு பழுதடைந்ததால் தமிழ்நாட்டில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – எழுவைதீவில் இருந்து கடந்த 6ஆம் திகதி காலை 9 மணிக்கு பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற மூன்று கடற்தொழிலாளர்களும் மதியம் 2 மணியளவில் இஞ்சின் பழுதடைந்ததால் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கரையொதுங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்தொழிலாளர்கள் மூன்று பேர் படகு பழுதடைந்ததால் தமிழ்நாட்டில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – எழுகைதீவில் இருந்து கடந்த 6ஆம் திகதி காலை 9 மணிக்கு பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற மூன்று கடற்தொழிலாளர்களும் மதியம் 2 மணியளவில் இஞ்சின் பழுதடைந்ததால் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கரையொதுங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் ஆனைகோட்டை, குருநகர் மற்றும் வல்வட்டிதுறை பகுதிகளை சேர்ந்த கடற்தொழிலாளர்களே இவ்வாறு இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தமிழக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.