வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்.
- ‘மாற்றத்துக்கான புள்ளடியை’ இட ஒட்டு மொத்த இலங்கை மக்களும் தயார்!
அயோக்கியனின் கடைசிப் புகலிடம் இனம் மற்றும் மதம் என்ற இரு ஆயுதங்களாகும்.இலங்கையில் ஆளும் சிங்கள வர்க்கம் கடந்த 75 வருடங்களாக இந்த இரு ஆயுதங்களை மூலதனமாகக் கொண்டே தமது ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றது.
இந்த ஆட்சிக்கு தென்னிலங்கை கொடுத்த பெரும் அடிதான் கடந்த வருடம் 2022 ஜூலை அரகலய எழுச்சி. ஆனால் சிங்கள ஆளும் வர்க்கம் சுதாகரித்துக் கொண்டு அரசியலில் முகவரி அற்று இருந்த ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் மீள எழுச்சி பெற தேவையான அனைத்து முயற்சிகளையும் மூர்க்கத்தனமாகவும்; மிலேச்சத்தனத்தனமாகவும் ‘நாடாளு மன்ற ஜனநாயகத்தின்‘ மூலம் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது. தென்னிலங்கை மக்கள் தேர்தல்களில் தாம் வழங்கிய ஆணையைத் திரும்பப் பெற முடியாது ‘ஆப்பிழுத்த குரங்கின்‘; நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் இருந்து விடுபட ‘மாற்றத்துக்கான புள்ளடியை‘ இட தென்னிலங்கை மக்கள் மாத்திரமன்றி, ஒட்டு மொத்த இலங்கை மக்களும் தயாராக இருந்தபோதும் ரணில் – ராஜபக்ஷக்களின் அரசியல் இருப்பு பறிபோய்விடும் என்பதால் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்றாகிவிட்டது. ஆனால் அடுத்த வருடம் ஜனாதிபதிதேர்தல் நடைபெறுமென தற்போது கூறப்பட்டுள்ள நிலையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலைப்போன்று நாடு பெரும் எதிர்பார்ப்பில் வைக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலைப்போன்று ஜனாதிபதி தேர்தலும் நடைபெற்றுவிடுமோ என்ற அச்சமும் தென்னிலங்கை மக்களிடம் இல்லாமல் இல்லை. தேர்தல் என்பதே ரணில் – ராஜபக்ஷ அணியினருக்கு ‘சிவப்பு விளக்காகவே‘ உள்ளது. அந்த வகையில் ரணில் – ராஜபக்ஷ அணியினர் தேர்தலை நோக்கி நகர்வார்களா என்பது கேள்விக்குறியே. தற்போதைய நிலையில் இந்த இரு அணியினருக்கும் இடையில் முறுகள் நிலை தலை தூக்கியுள்ள போதும் இருபகுதியினருமே சமரசத்திற்குப் போய் பொருளாதார மீட்சியைக் காரணம் காட்டி நாடாளுமன்றத்துக்கூடாக தேர்தல் அற்ற சமரச முடிவை நோக்கி நகரக் கூடிய வாய்ப்புக்களே கூடுதலாகத் தெரிகின்றது.
தற்போது நாடாளு மன்றமா? நீதித்துறையா? ஆதிகாரமிக்கது என்ற சர்ச்சையை ஆளும் தரப்பு ஆரம்பித்துள்ளது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு யோசனையை எந்தவொரு நீதிமன்றிலும் சவாலுக்கு உட்படுத்த முடியாது
உள்நாட்டுகடன்களைமறுசீரமைப்பதற்காகசெயற்படுத்தப்படும்யோசனையை எந்தவொரு நீதிமன்றத்திலும் சவாலுக்கு உட்படுத்த முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்திற்கு (09) தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற நடைமுறையைப் பின்பற்றி நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு எதிராகஇ எந்தவொரு வகையிலும் உத்தரவு அல்லது தீர்ப்பை வழங்குவதற்கு இலங்கை அரசியலமைப்பின் கீழ் நிறுவப்பட்டுள்ள எந்தவொரு நீதிமன்றத்திற்கும் அதிகாரம் இல்லை என சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறான எந்தவொரு உத்தரவு அல்லது நீதிமன்ற தீர்ப்பும் அரசியலமைப்பு மீறலாக அமையும். அரசியலமைப்பின் 148 ஆவது பிரிவிற்கு அமையஇ அரச நிதி தொடர்பான முழுமையான கட்டுப்பாடு பாராளுமன்றத்தின் வசம் காணப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டமானது அமைச்சரவையினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுஇ பாராளுமன்ற அரச நிதி தொடர்பான செயற்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர்இ 2023 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் நினைவுபடுத்தினார்.
அதற்கமையஇ குறித்த யோசனையானது உயர் நீதிமன்றத்தில் அல்லது 1978 ஆம் ஆண்டின் இலங்கை அரசியலமைப்பின் கீழ் நிறுவப்பட்ட வேறு எந்தவொரு நீதிமன்றத்திலும் விசாரணைக்குட்படுத்தஇ மறுபரிசீலனை செய்ய அல்லது சவாலுக்கு உட்படுத்தப்பட முடியாது. பாராளுமன்ற செயற்பாடுகளை கேள்விக்குட்படுத்த அல்லது தலையீடு செய்ய நீதிமன்றத்திற்கு முடியாது என முன்னாள் சபாநாயகர் அனுர பண்டாரநாயக்க மிகத் தெளிவாக அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.
இது நாடாளுமன்றத்தில் ரணில் – ராஜபக்ஷ அணியினர் எதிர் காலத்தில் எந்தத் திசை நோக்கியும் பயணிக்கலாம் என்பதை கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது. அந்த வகையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தற்போதைக்கு இல்லை என்பது போல மாகாண சபைகளுக்கான தேர்தலும் எதிhவரும் மூன்று வருடங்களுக்கு இல்லை என்பதையும் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க நாடாளுமன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரவாரம் காட்டும் 2024 இல் ஜனாதிபதி தேர்தல் என்ற சுலோகமும் பிசுபிசுத்துப் போகலாம் என்ற ஆரூடங்களும் எழ இடமுண்டெனலாம்.
இந்த ஒரு பின்னணியில் ரணில் – ராஜபக்ஷ அணியினர் வெளித் தோற்றத்தில் முரண்பட்டுக் கொண்டபோதும் ஒரு புள்ளியில் தமது இருப்புக்காக சமரசம் காணும் நிலையே கூடுதலாக இருக்கின்றது.
இந்த முரண்பாடுகளுடனான உறவில்கூட இரு பகுதியினரும் தமக்கான அரசியல் பாதையைச் செப்பனிடுவதிலும் குறியாக இருக்கின்றனர் என்பதும் வெளிப்படை.
இதற்கென இரு பகுதியினருமே கைகளில் எடுத்துள்ளது அயோக்கியனின் கடைசிப் புகலிடம் இனம் மற்றும் மதம் என்ற இரு ஆயுதங்களாகும். அந்த ஆயுதத்தையே ரணில் – ராஜபக்ஷ அணியினர் தற்போதும் கைகளில் எடுத்துள்ளனர் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அரசாங்கம் மீண்டும் மீண்டும் சில இனவாத அல்லது மதவாத சம்பவங்களை தூண்டி மீண்டும் ஒரு கறுப்பு ஜூலையை உருவாக்க முயற்சிக்கிறது என Fr J.C. Pieris தனது கருத்தை ஆங்கில நாளிதழில் பதிவு செய்துள்ளார்.
ஆனால் அவை ஒவ்வொரு முறையும் தோல்வியடைகின்றனஎன்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார். இலங்கை முற்றிலும் வேறுபட்டது மற்றும் வேறு எந்த தலைமுறையும் இல்லாத ஒரு தலைமுறை என்பதை ஆரகலய நிரூபித்தது என்றும் Fr J.C. Pieris குறிப்பிடுகின்றார்.
தமிழ் மக்களுக்கெதிராக தற்போது நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெறும் சம்பவங்கள் ரணில் – ராஜபக்ஷ அணியினர் இதுகுறித்து கண்டும்காணாதது போல் நடந்து கொள்வதும் இன்னொரு கறுப்பு ஜூலைக்கான அபாயத்தை உணர்த்துவதாக உள்ளது.
- அரகலயா சக்தி படைத்ததா?
ஆனால் அரகலயாக்கள் குறித்த கணிப்பு ‘சிஸ்டம் சேன்ஜ்‘; விடயத்தில் தென்னிலங்கையை சிங்கள ஆளும் வர்க்கத்திற்கெதிராக திசை திருப்புவதில் வெற்றி கண்டது போன்று கொதி நிலை நோக்கி நகர்த்தப்படும் இன்னொரு கறுப்பு ஜூலையை தடுத்துவிடும் சக்தி படைத்ததா என்பது கேள்விக் குறியே.
- கடலில் மிதக்கும் பனிப் பாறை.
காலிமுகத் திடலில் மே 18 நினைவேந்தலின்போதும் கறுப்பு ஜூலை பொரளை அனுஷ;டிப்பின் போதும் அந்த நிகழ்வுகளைக் குழப்ப வந்தவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் என்பது உண்மையே. ஆனால் அந்த விரல்விட்டு எண்ணிக்கையானவர்களின் பின்புலத்தை குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. கடலில் மிதக்கும் பனிப் பாறை போன்று பலமான கொடூரமான மறைந்த கரங்களின் நிகழ்ச்சி நிரல்களும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
இந்நிலையில் ‘சிஸ்டம் சேன்ஜ‘; அரகலயாக்களால் இன்னொரு கறுப்பு ஜூலை போன்ற நாசகார அரசியல் நகர்வுகளை தடுத்து நிறுத்தும் சக்தி படைத்தவர்களாக இருப்பர் என எதிர்பார்க்க முடியாது.
- ‘சிஸ்டம் சேன்ஜ‘ இன்னும் நடக்கவில்லை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தற்போது பதவியில் இருந்து விலகி வரி செலுத்துவோரின் ஆதரவுடன் ஆடம்பரமாக வாழ்கின்ற போதிலும் அரகலய அமைப்பு கோரிய ‘முறைமை மாற்றம்‘ அதாவது ‘சிஸ்டம் சேன்ஜ‘; இன்னும் நடக்கவில்லை.இதற்கெதிராக தென்னிலங்கை மக்களை மீண்டும் அணிதிரட்ட சக்தியற்றவர்களாகவே அரகலயாக்கள் உள்ளனர்.
- மாயைக்குள் அவசரப்பட்டு வீழ்வதற்கு தமிழ் மக்கள் தயாராக இல்லை.
இந் நிலையில் அரகலயாக்களின் வரவுடன் தென்னிலங்கை மக்களின் மனங்களில் அனைத்து மக்களையும் அரவணைத்து செல்லும் மனமாற்றம் ஏற்பட்டுவிட்டதான மாயைக்குள் அவசரப்பட்டு வீழ்வதற்கு தமிழ் மக்கள் தயாராக இல்லை. தென்னிலங்கை இடதுசாரிகளின் வர்க்க சிந்தனைகளுடன் இழுபட்டு மலையக மக்கள் தமது பிரஜா உரிமையை இழந்தனர். இறுதியில் தென்னிலங்கை இடதுசாரிகள் சிங்கள ஆளும் வர்க்கத்துடன் சமரசமாகி கரைந்து போனமை வரலாறு.
- அரகலயாக்களின் கருத்தியலுக்குக் கிடைத்த வெற்றி.
எந்தவொரு தலைமைத்துவத்தின் உதவியுமின்றிஇ எந்தவொரு அமைப்பும் இல்லாமல்இ எந்தவொரு சக்திவாய்ந்த மத அல்லது அரசியல் ஆதரவின்றி அந்த நிலையை அடைவது அரகலயாவின் உச்சக்கட்டமாகும்.
மேலும் இளம் இலங்கை முற்றிலும் வேறுபட்டது மற்றும் வேறு எந்த தலைமுறையும் இல்லாத ஒரு தலைமுறை என்பதை நிரூபித்தது.
இது அரகலயாக்களின் கருத்தியலுக்குக் கிடைத்த வெற்றியாகும். இந்த வெற்றி போல் அனைத்து விடயங்களிலும் அரகலயாக்கள் வென்றிடுவர் என்று எதிர்பார்க்க முடியாததாகும். ஏனெனில் நாட்டின் சூழல் மாறிவிட்டது. நிச்சயமற்ற தன்மைக்குள் நாடு உள் வாங்கப்பட்டுவிட்டது.
எனவே அரகலயாக்கள் குறித்து தமிழ் மக்கள் அதீத நம்பிக்கை வைத்து நடப்பதற்கான காலம் இன்னும் கனிந்துவிட்டதாகக் கொள்வதற்கில்லை. ஏனெனில் அரகலயாக்களின் நிகழ்ச்சி நிரல் ‘சிஸ்டம் சேன்ஜ‘; என்ற கருத்தியலுடன் மட்டுப்படுத்தப்பட்டது. அந்தக் கருத்தியல் தென்னிலங்கையை குறுகிய காலத்திற்குள் அணி திரட்டுவதில் வெற்றியீட்டியது. ஆனால் அந்த வெற்றி தக்க வைத்துக் கொள்ளப்படவில்லை. அரகலயாக்கள் எதிர்பார்த்த மாற்றத்துக்கும் வழி சமைக்கவில்லை. எனினும் அரகலயாக்களும் அவர்களின் கருத்தியலும் தென்னிலங்கை மக்களின் மனங்களில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டது என்பது மட்டும் உண்மையாகும்.
அந்தவகையில் அரகலயாக்கள் தமிழ் மக்களுடன் இணைந்து புரட்சி செய்துவிடுவர் என்றோ அல்லது அரகலயாக்களை வைத்து தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாiஷகளை வென்றெடுத்துவிடுவர் என்றோ ரணில் – ராஜபக்ஷ அணியினருக்கோ அல்லது சிங்கள ஆளும் வர்க்கத்தினருக்கோ அச்சமூட்டும் நிகழ்வுகள் ஏதும் நடந்துவிடப் போவதில்லை.
சில வேளைகளில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களுடன்.அரகலயாக்கள் பொது உடன்பாட்டுக்கு வரும் சாத்தியக் கூறுகள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
மொத்தத்தில் தமிழ் மக்கள் 2009க்குப் பின் எவ்விதமான தீர்க்கமான அரசியல் நகர்வுகளும் இன்றி பூஜ்ஜியத்திற்குள் தள்ளப்பட்டுவிட்டனர். தனி நாடு கோரி மக்கள் ஆணை வழங்கிய தமிழ் மக்கள் சமஷ;டி தீர்வுக்குக் கீழ் இறங்கி இன்று வெறும் கையுடன் 13 உடன் சமரசமாகி உள்ளனர். தமிழ்த் தலைமைகளின் வீரவசனம் அவர்கள் கூறித் திரிந்த இராஜதந்திரம் அனைத்துமே செல்லாக்காசாக போய்விட்ட நிலையில் தமிழ்த் தலைமைகள் தமது அரசியல் சுய நலத்துக்காக தமிழ் மக்களை அதல பாதாளத்தில் தள்ளியுள்ளனர்.
உண்மையில் அனைத்து தமிழ்த் தலைமைகளுமே கையாலாகாத நிலையில் தத்தமது இருப்புக்காக ஏதோ ஒருவகையில் இந்தியாவிடம் சரணாகதி அடைந்துள்ளனர்.
13உம் முழுமையாக நடைமுறைக்கு வருமா என்பதை தீர்மானிக்கும் சக்தி இந்தியாவின் கைகளில் உள்ளது.
அதே வேளையில் நடைபெற உள்ள இந்தியத் தேர்தலின் பரப்புரையினை இந்திய உள்துறை அமைச்சர் அமிதாஷ; இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையே என தமிழக மண்ணில் இருந்து ஆரம்பித்துள்ளார்.
மொத்தத்தில் இந்திய தேர்தல் வியூகத்திற்குள் தமிழ் மக்களின் அரசியல் தலைவிதி பகடைக் காயாக மாற்றப்பட்டுவிட்டது.