பு.கஜிந்தன்
குளவி கொட்டுக்கு இலக்காகி 26-08-2023 அதிகாலை 1 மணியளவில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த முதியவர் தேவாலயத்திற்கு சென்றுகொண்டிருந்தார். இதன்போது பனையில் இருந்து கீழே விழுந்த குளவி கூட்டில் இருந்த குளவிகள் அவரை கொட்டின.
இந்நிலையில் அவர் மிருசுவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அதன்பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு 11 மணியளவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தவசிகுளம் – மிருசுவில் பகுதியைச் சேர்ந்த இமானுவேல் ஜேசுரட்ணம் (வயது 79) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.