தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. தொடர்ந்து இரண்டு மணி நேரம் இடி மின்னனுடன் கூடிய கனமழை நீடித்த காரணத்தினால் சாலையில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடியது. சங்கரன்கோவிலில் கடந்த இரண்டு நாட்களாக காற்றும் லேசான சாரல் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென கன மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சங்கரன்கோவிலில் பகல் நேரங்களில் வெயில் இருந்து வந்த சூழலில் மாலை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இடி மின்னலுடன் மழை பெய்து வந்ததால் சங்கரன்கோவிலில் சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
![சங்கரன்கோவிலில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கியது கனமழை.. குஷியில் மக்கள்!](https://uthayannews.ca/wp-content/uploads/2023/09/Sankerkovil-rain.jpg)