பிரபலமான டொராண்டொ சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பாக சுசி கணேசனின் “தில் ஹெ கிரே” தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. உத்திரப்பிரதேச காவல்துறையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் வினித்குமார் சிங், அக்ஷய் ஓபராய், ஊர்வசி ரவ்ட்டேலா நடித்திருக்கிறார்கள். எம். ரமேஷ் ரெட்டி தயாரித்திருக்கிறார். கூரையில்லாத வீடுகளில் வாழ்வதைப்போல வாழும் இன்றைய சோசியல் மீடியா உலகத்தில், அந்தரங்கம் களவு போனால் நடக்கும் ஆபத்து பற்றி அலசும் இப்படம் தேர்வானது குறித்து சுசி கணேசன் பேசும் போது “இந்திய அரசின் தேர்வு இப்படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம். அதிலும், முதல் காட்சி, டொராண்டோ திரைப்படவிழாவில் திரையிடப்படுவது, உலக சந்தையின் பார்வை இப்படத்தின் பக்கம் திருப்பியிருக்கிறது” என்றார்.
![டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவிற்கு சுசி கணேசனின் படம் தேர்வு!](https://uthayannews.ca/wp-content/uploads/2023/09/Dronda-film-award-Susi-ganesan-padam-thervu.jpg)