இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுத் தொகையானது ரூ.8.2கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
நோபல் பரிசுத் தொகை கடந்த 2012ல் ரூ.7.45கோடியில் இருந்து ரூ.5.9கோடியாக குறைக்கப்பட்டது. 2017ம் ஆண்டில் இது ரூ.5.9 கோடியில் இருந்து ரூ.6.7 கோடியாக உயர்த்தப்பட்டது.
2020ம் ஆண்டில் பரிசு தொகையானது ரூ.7.45 கோடியாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு தொகை ரூ.8.2 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பரிசை வழங்கும் நோபல் அறக்கட்டளை அறிவித்துள்ளது.