மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் இந்த வருடம் (2023) மாகாண மட்டத்திலான தமிழ் தினப் போட்டிகளில் வெற்றிகளை பெற்றுள்ளன.
பாவோதல், தனி இசை, போட்டிகளிலும் வெற்றிகள் தட்டிச் செல்லப்பட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழித் தினப் போட்டிகள் யாழ். மகளிர் இந்துக் கல்லூரியில் நேற்று முன் தினம் (16.09.2023) நடை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரியின் மாணவியான ஜெயக்குமார் கஸ்னிக்கா பிரிவு – 2 பாவோதலில் முதலிடம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்தார்.
பிரிவு – 2 பாவோதலில் இரண்டாம் இடத்தினை யாழ். மெதடிஸ்த பெண்கள் உயர் கல்லூரி மாணவி செல்வி பாரதிதாசன் ஜனார்த்தனி பெற்றார்.
அத்துடன் மூன்றாம் இடத்தை மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவி சிறி தீபன் அஹாஷினி பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.