யாழ்ப்பாணம் வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஹாட்லிக் கல்லூரியின் 185 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி ஒன்று இன்று (25/09/2023) இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் ரி.கலைச்செல்வன் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில், முதல் நிகழ்வாக விருந்தினர்கள் தமிழர் பாரம்பரிய இசை முழங்க அழைத்துவரப்பட்டு மண்டபத்தில் மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பரானது.
தொடர்ந்து அதிபரின் தலமை உரை இடம் பெற்றதை தொடரந்து பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவத்துறை சிரேஸ்ர விரிவுரையாளர் மருத்துவ கலாநிதி E.Y.A சார்ள்ஸ் சிறப்புரை நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து ஹாட்லிக் கல்லூரியின் 185 வது ஆண்டு நினைவாக புகைக் கூடுகள் இரண்டு வானில் ஏவப்பட்டன.
தொடர்ந்து கல்விக் கண்காட்சிக் கூடத்தை பிரதம விருந்தினர் நாடாவை வெட்டி சம்பிர்தாயபூர்வமாக திறந்து வைத்து பார்வையிட்டார்.
சைவம், கிறிஸ்தவ பௌத்த மத பாரம்பரிய வழிபாடுகள் மற்றும் பண்பாட்டு அம்சங்கள், நுண்கலை தொடர்பானவை, விஞ்ஞானம், சாரணியர்களின் உருவாக்கங்கள், ஓவிய காட்சிகள், தகவல் தொழில் நுட்ப விடயங்கள், இலத்திரனில் உபகரணங்கள் உட்பட பல்வேறு கண்டுபிடிப்புக்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இதில் வடமராட்சி வலய கல்விப் பணிப்பாளர் சத்தியபாலன், பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க, வல்வெட்டித்துறை சிதம்பர கல்லூரி அதிபர் வே.பரமேஸ்வரன், பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கல் உயர்தர பாடசாலை அதிபர் திருமதி பாலராணி, மற்றும் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதே வேளை குறித்த கண்காட்சியை அயல் பாடசாலைகளின் மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டுவருகின்றனர்.
இதேவேளை நாளை பிற்பகல் 4 மணிவரை இடம்பெறவுள்ள கண்காட்சியை பிற்பகல் இரண்டு மணிவரை மாணவர்கள் பார்வையிடலாம் என்றும் இரண்டு மணிமுதல் 4 மணிவரை பொதுமக்கள் பார்வையிடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.