தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் எழுச்சி ஊர்திப் பவனி யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் 24-09-2023 அன்று ஆரம்பமானது.
வடக்குப் முழுவதும் செல்லவுள்ள எழுச்சி ஊர்திப் பவனி கொடிகாமத்திலிருந்து ஆரம்பித்து சாவகச்சேரி, பூநகரி, முழங்காவில், மன்னார், வவுனியா ஊடாக பயணித்து கிளிநொச்சியை வந்தடைந்து 26 ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை வந்தடையவுள்ளது.