சமூகப் பணியாளர் பலருக்கு விருதுகள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டதுடன் பலரும் பாராட்டுரைகளையும்வழங்கினர்.மக்கள் தாமாக முன் வந்து தம்பதியைப் பாராட்டியது, முருகவேள் தம்பதியினர் வாழ்ந்த வாழ்வின் அறுவடையெனத் தோன்றிற்று. இதுவொரு மணிவிழாதான், ஆனால் இயல், இசை, நாடகம் (ரமணனின் பேச்சே நாடகம்)என அரங்கு கலையால்நிறைந்தது.
தொடர்ந்து எழுத்தாளரும் பேச்சாளருமான கல்லாறு சதீஸ் அவர்கள் தலைமையில்’ பூநகரியான் பொன்.முருகவேள்’ எனும் மணிவிழா மலர் வெளியிடப்பட்டது. மலரினைச் துணைப் பேராசிரியர் திரு.சுவேந்திர ராசா அறிமுகம் செய்ய,கல்வியாளர் திரு.அருந்தவராஜாமதிப்புரையாற்றினார்.
இந்த மணிவிழா மலர் ஒரு மணிவிழாவுக்கு எப்படி ஒரு நூலைத் தயாரிக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளதாக யாழ் பல்கலைக்கழக மேளாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சிவலிங்கராசா பாராட்டியுள்ளதனை மலரை வாசித்தபோது சாலப்பொருத்தம் என்று கூறலாம்.
கடந்த அறுபது ஆண்டு வாழ்வில் திரு முருகவேள் தமிழுக்கு ஆற்றிய அளப்பரிய பணியினைப் பாராட்டிச் சுவிஸ்தமிழ் இலக்கியச் சங்கம் “நிறை தமிழ்” எனும் விருதினை வழங்கிக் கெளரவித்தது. விழாவில் சுவிற்சலாந்து தேசத்தின் அரசியல் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.