பு.கஜிந்தன்
வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் தேவஸ்தான புரட்டாதி ஞாயிறு உற்சவம் இன்று இடம்பெற்றது.
வசந்த மண்டப பூஜைகள் இடம் பெற்று பின்னர் அங்கிருந்து வல்லிபுரத்தாழ்வார் தண்டிகை வாகனத்தில் வீற்று உள்வீதியுடாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் கலந்துகொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுச்சென்றனர்
ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் சிறப்பு பூசைகளை மேற்கொண்டனர்.