ராஜ்பவன் தாக்குதல் குறித்த புகாரை காவல் துறை பதிவு செய்யவில்லை என ஆளுநர் மாளிகை குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது: ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார் தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்துவிட்டது.
அவசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.