(மன்னார் நிருபர்)
(29-10-2023)
கல்வி அமைச்சினால் நடாத்தப் பட்ட அகில இலங்கை தமிழ் மொழித்தினம் தேசிய மட்ட போட்டியில் மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி மாணவி பாஸ்கரன் வினுக்சி முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
அகில இலங்கை தமிழ் மொழித்தினம் தேசிய மட்ட பாவோதல் போட்டியில் மூன்றாம் பிரிவில் முதலாம் இடத்தை பெற்று பதக்கத்தை தனதாக்கி பாடசாலைக்கும் மன்னார் மாவட்டத்திற்கும் மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி பாஸ்கரன் வினுக்சி பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.