உதவி ஆய்வாளர் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் விஷம் அருந்திய சாத்தான்குளம் காவலர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சிவகாசியைச் சேர்ந்த சந்திரன் மகன் பால்பாண்டி (வயது 30). இவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 3ஆண்டுகளாக காவலராக பணிபுரிந்து வந்தார்.
இவருககு மனைவி ஜெயஸ்ரீ மற்றும் மகன் மித்ரன் (2) உள்ளனர். பால்பாண்டிககு நீண்டகால உதவி ஆய்வாளராக வேண்டும் என ஆசை இருந்து வந்துள்ளது.
இதனால் கடந்த ஆண்டு உதவி ஆய்வாளர் தேர்வில் பங்கு பெற்று தேர்வு எழுதினார். அதில் 1மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளார். மீண்டும் தற்போது நடந்து முடிந்த உதவி ஆய்வாளர் தேர்வு எழுதியுள்ளார். அதற்கான முடிவு வந்ததில் அரை மதிப்பெண் குறைந்து தோல்வி அடைந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்து காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 26 ஆம்தேதி வீட்டில் யாருக்கும் தெரியாமல் களை கொல்லி விஷம் மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து நெல்லை மருத்துவகல்லூரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவரை மேல் சிகிச்சைககாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிககப்பட்டு வந்தது. இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் முத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.