சாத்தான்குளம் அருகே குடும்ப பிரச்னை காரணமாக சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டு இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சொக்க லிங்கபுரத்தை சேர்ந்த பரமசிவன் மகன் செந்தில் வேல்(வயது 35). இவர் அங்கு கோழிப்பண்ணை நடத்தி கோழி வியாபாரமும செய்து வந்து மீதமுள்ள நேரத்தில் கார் ஓட்டுனராகவும் பணிபரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் வெள்ளி்க்கிழமை செந்தில்வேல், சாத்தான்குளம் பகுதியில் காட்டுப் பகுதியில் அமர்ந்தவாறு குடும்ப பிரச்னை காரணமாக தான் விஷம் குடித்து தற்கொலை செய்யப்போவதாக உருக்கத்துடன் பேசி வாட்ஸ்அப், சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டு இருந்தார்.இதுபோல் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் முத்துவுக்கும் வீடியோ அனுப்பி இருந்தார்.
இது சமுக வளைதலத்தில் வைரலானது. இதையடுத்து செந்தில்வேலின் தற்கொலைமுயற்சியை தடுக்கும் வகையில் போலீஸ் கண்ட்ரோல் அறைக்குவீடியோ அனுப்பி போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.இதுபோல் செந்தில்வேலின் நண்பர்கள், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்து தற்கொலை முயற்சியை தடுக்க முயன்றனர். ஆனால் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.
வீடியோவில் காணப்பட்ட இடம் சாத்தான்குளம் கரையடி குளம் என தெரியவந்ததையடுத்து போலீசார் மற்றும் செந்தில்வேலின் உறவினர்கள் சனிக்கிழமை காலை சம்பவ இடத்திற்குசென்றனர். அங்கு செந்தில்வேல் விஷம் அருந்தி உயிரிழந்தது தெரியவந்தது. ,. இதையடுத்து அவரது சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம்அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீடியோ பதிவிட்டு இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் நடத்திய விசாரணையில், செந்தில் வேல் வெள்ளிக்கிழமை குடும்பத்தில் எல்லாருக்கும் திருமணமாகிவிட்டது. எனக்கு ஏன் திருமணம் செய்து வைக்கவில்லையென என அவர் தந்தையிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கொள்ளை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளதாலும், மது பழக்கம் உள்ளதால் யாரும் பெண் தர முன்வரவில்லையென தெரிவித்ததால் ஆத்திரமடைந்து வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லையெனவும், சனிக்கிழமை காலை சாத்தான்குளம் கரையடி குளத்துக்கு அருகில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் நாகராஜன் வழக்குபதிந்தார். காவல் ஆய்வாளர் முத்து விசாரித்து வருகிறார்.