தென் கொரிய பாடகி கிம் நா ஹீ திடீரென உயிரிழந்த சம்பவம் தென் கொரிய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நா ஹீ எனும் பெயரால் அறியப்படும் தென் கொரிய பாடகி கிம் நா ஹீ கடந்த நவ. 8ம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான காரணம் வெளியாகவில்லை. நா ஹீயின் இறுதிச் சடங்கு இன்று(நவ. 10) கியோங்கி-டோ மாகாணத்தின் பியோங்டேக்கில் நடைபெறுவதாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நா ஹீ 2019ம் ஆண்டு வெளியான “ப்ளூ சிட்டி” என்ற பாடலின் மூலம் கே-பாப் உலகத்தில் பாடகியாக அறிமுகமானார். சமீபத்தில் இவர் பாடிய ‘ரோஸ்’ என்ற பாடல் வெளியானது. இந்த பாடல் வெளியான போது, தனது ரசிகர்களுக்காக இப்பாடலை அர்ப்பணிப்பதாக நா ஹீ அறிவித்தார்.