மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான என்.சங்கரய்யா (102), கடந்த சில நாட்களாக சளி-இருமல், காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சங்கரய்யா சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதற்கிடையே, சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள தியாகி சங்கரய்யா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் பொன்முடி ஆகியோரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், தகைசால் தமிழர் சங்கரய்யா உடலுக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.