30 ஆண்டுகளாக எந்த பதவியிலும் இல்லாமல் காங்கிரஸ் கட்சியை மட்டும் நிர்வகித்துவரும் காந்தி குடும்பத்தார் மீது ஏன் வயிற்றெரிச்சல் என பா.ஜ.வினரின் வாரிசு அரசியல் குறித்த விமர்சனத்திற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கேள்வி எழுப்பினார்.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியல் செய்வதாகவும், ராகுலை பிரதமராக்க சோனியா விரும்புவதாகவும் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். இது தொடர்பான கேள்விக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அளித்த பதில்: காந்தி குடும்பத்தார்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதை தவிர பா.ஜ.வினர் வேறு எதுவும் பேச மாட்டார்கள்.
கடந்த 30 ஆண்டுகளாக, காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் பிரதமராகவில்லை. 30 ஆண்டுகளாக, பதவி ஏதுமின்றி வாழ்ந்த குடும்பம், காங்கிரஸ் கட்சியை மட்டும் நிர்வகித்து வருகின்றது. அவர்களுக்கு ஏன் இந்த வயிற்றெரிசல் இவர்களை குறிவைக்காமல், களப்பணியாற்றும் எங்களை குறிவைத்து பிரசாரம் செய்ய வேண்டும். அவர்கள் நாட்டில் அதிக நம்பகத்தன்மை கொண்டவர்கள் என்பதால், இந்த குடும்பத்தை பார்த்து பயப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.