சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. 2014 ஆம் ஆண்டு வெளியான இன்று நேற்று நாளை என்ற டைம் டிராவல் திரைப்படத்தை இயக்கி வெற்றி அடைந்தவர் ரவிக்குமார். அதற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமானார். இந்த திரைப்படத்திற்கான பணிகளும் வேகமாக தொடங்கின. ஆனால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக படத்தின் வேலைகள் தடைபட்டன. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் அயலான் திரைப்படத்தின் பணிகள் நிறைவடையாமல் உள்ளன. அத்துடன் படத்தின் தயாரிப்பாளரும் மாற்றப்பட்டார். இருந்தாலும் அயலன் நிதி சிக்கல் முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் பொங்கல் பண்டிகைக்கு அயலான் திரைப்படம் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்காக படத்தின் இறுதி வேலைகள் ஒருபுறமும், படத்தின் நிதி சிக்கலை தீர்க்கும் வேலைகள் மறுபுறமும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அயலான் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது அதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. அந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க ரவிக்குமார் இயக்குகிறார். அதே போல் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட மற்ற படக்குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்தப் படத்திற்கான அறிவிப்பு 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதேபோல் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என கூறுகின்றனர்.