இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி, திருமணமான மகன் இறந்து விட்டால், அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நாகையைச் சேர்ந்த மோசஸ் என்பவர் 2012ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், அவரது சொத்தில் பங்கு கேட்டு தாய் பவுலின் இருதய மேரி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் தாய்க்கு சொத்தில் பங்கு வழங்க வேண்டும் என்று நாகை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மோசஸின் மனைவி அக்னஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக வழக்கறிஞர் மித்ரா நேஷா நியமிக்கப்பட்ட நிலையில், நீதிபதிகள் சுப்பிரமணியன், செந்தில்குமார் விசாரணை நடத்தினர். அப்போது, வாரிசுரிமை சட்டம் 42வது பிரிவின்படி, கணவர் இறந்துவிட்டால் அவரின் விதவை மனைவி மற்றும் குழந்தைகளுக்குதான் சொத்தில் பங்கு உள்ளது என்று வழக்கறிஞர் மித்ரா நேஷா விளக்கினார்.
![திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய்க்கு பங்கு கிடையாது - உயர்நீதிமன்றம் அதிரடி!](https://uthayannews.ca/wp-content/uploads/2023/11/Chennai-highcourt.jpg)