மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வந்த நிலையில், மீண்டும் கனமழை பெய்தது. இந்த நிலையில், கனமழை காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால், அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. மேலும், பேச்சிப்பாறை அணையில் இருந்து வினடிக்கு 100 கன அடி உபரி நீரும், சிற்றார் அணையில் இருந்து வினாடிக்கு 129 கன அடி உபரி நீரும் இரண்டாவது நாளாக வெளியேறப்படுவதால் கோதையாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், திற்பரப்பு நீர்வீழ்ச்சியிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் சுற்றுலா பயணிகள் இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளனர்.
![மீண்டும் கனமழை! திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை](https://uthayannews.ca/wp-content/uploads/2023/11/Thirparapu-water-falls.jpg)