தேர்தலை முன்னிட்டு இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் முதல்-அமைச்சர் அசோக் கெலாட் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில், முக்கிய வாக்குறுதிகளாக * விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வரை வட்டியில்லா கடன். 1.05 குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு தோம்பு வழங்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். *4 லட்சம் அரசு வேலைகள் உருவாக்கப்படும். * 10 லட்சம் வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும். * சிரஞ்சீவி காப்பீட்டு திட்டத்தின் தொகை ரூ. 50 லட்சமாக உயர்த்தப்படும். * மாட்டுச்சாணம் கிலோ ரூ.2 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். *அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும். *குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.10,000 வழங்கப்படும். * இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க ரூ.15 லட்சம் காப்பீடு செய்யப்படும். *கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். *அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வித்திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் பல்வேறு சுவாரஸ்யமான வாக்குறுதிகளை காங்கிரஸ் அள்ளி வீசியுள்ளது.