உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களையும் இன்றைக்குள் மீட்க மீட்புக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்தில் 11வது நாளாக மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நுண் சுரங்கப்பாதைக்கு கிடைமட்ட துளையிடல், செங்குத்து மீட்பு சுரங்கப்பாதைக்கான கட்டுமானம் போன்ற பணிகளை மேற்கொண்டு, தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கிடைமட்ட துளையிடம் மூலமாக 39 மீட்டர் குழாய் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. இது 45-50 மீட்டர் செலுத்தும் வரை தொழிலாளர்களை மீட்கும் நேரத்தை சரியாக கணிக்க முடியாது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். இன்றைக்குள் 41 தொழிலாளர்களையும் மீட்பதற்கான பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.