திருச்சியில் பிரபல ரவுடியாக வலம் வந்த கொம்பன் ஜெகன் (வயது 30) என்பவருக்கு எதிராக 11 வழக்குகள் உள்ளன. இதனால், அவரை பிடிக்க காவல் துறையினர் முயற்சித்தனர். பல்வேறு இடங்களிலும் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில், சனமங்கலம் பகுதியில் அவர் பதுங்கி இருக்கிறார் என கிடைத்த தகவலை தொடர்ந்து, காவல்துறை அந்த பகுதிக்கு சென்றனர். அப்போது, காவல் உதவி ஆய்வாளர் வினோத் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பிக்க முயன்றார். இதனை அடுத்து காவல்துறை நடத்திய என்கவுண்ட்டரில் அவர் சுட்டு கொல்லப்பட்டார்.