தமிழ்நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 2700 கன அடி நீர் திறக்க வேண்டும் என காவேரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
காவேரி நீர் விவகாரத்தில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே தொடர்ந்து வார்த்தை மோதல்கள் நீடித்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்திற்கு தரவேண்டிய உரிய அளவு தண்ணீரை காவேரியில் இருந்து கர்நாடகா அரசு தொடர்ந்து தர மறுத்து வருகிறது. இந்நிலையில் அதாவது நவம்பர் 23ம் தேதி காணொளி காட்சி மூலம் காவேரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 90வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டம் காணொளி கான்ஃபிரன்ஸ் மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 2,700 கன அடி தண்ணீர் திறக்கவும், நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிலுவையில் உள்ள தண்ணீரை திறந்துவிடவும் கர்நாடக அரசுக்கு காவேரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.