பாஜகவினருக்கு தோல்வி உறுதி என தெரிந்துவிட்டதால் பதற்றத்தில் இருக்கிறார்கள் என்று அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் தெரிவித்தார்.
ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. முதல் அமைச்சர் அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அசோக் கெலாட் கூறியதாவது:-
ராஜஸ்தானில் ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்ப்பு அலை இல்லை. காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும். பா.ஜனதா தலைவர்கள் மாநிலத்திற்கு வெளியில் இருந்து பிரசாரத்திற்காக வந்தவர்கள். அடுத்த ஐந்தாண்டுக்கு அவர்களை இங்கு பார்க்க முடியாது. இது மோடியின் தேர்தல் இல்லை. இது மாநில சட்டசபை தேர்தல். நாங்கள் இங்கேதான் இருப்போம். அதோடு மக்களோடு இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.