ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிசம்பர் 3 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு 3 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
டிசம்பர் 8 முதல் 15 வரை இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் முக்கியத்துவமாக ராகுல் இந்திய புலம்பெயர்ந்தோருடன் உரையாற்ற உள்ளதாகவும், அவரது பயணத்தின்போது பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் இந்த ஆ ண்டின் தொடக்கத்தில் நார்வே, நெதர்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இந்திய புலம்பெயர்ந்தோருடன் உரையாடல் நிகழ்த்தினார் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுடன் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.