சிறைக்குள் மது அருந்திய தலைமைக்காவலர் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சிறைச்சாலையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் ஜெயக்குமார். இவர் பணியில் இருக்கும் போதே கிளை சிறைச்சாலை வளாகத்தில் மது அருந்தி கொண்டிருக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. பணியில் இருக்கும் போதே அநாகரீகமாக நடந்து கொண்ட தலைமை காவலர் மீது சிறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தும்படி சிறைத்துறை காவல்துறை தலைவர் அம்ரேஷ் புஜாரி உத்தரவிட்டார். அதன்படி வேலூர் சிறைக்கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர் துறைரீதியிலான விசாரணை நடத்தினர். இதையடுத்து தலைமைக்காவலர் ஜெயக்குமாரை இடைநீக்கம் செய்து வேலூர் சிறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.