மதுரை திருப்பரங்குன்றம் அருகே தனியார் திருமண மண்டபத்தில், கலைஞர் 100 வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம். பி.யுமான கனிமொழி பங்கேற்றார். அமைச்சர்கள் பிடித்தார் பழனின்வேல் தியாகராஜன், மூர்த்தி, மேயர் இந்திராணி ஆகியோர் பங்கேற்றனர்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த கனிமொழியிடம் அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கியது தொடர்ந்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அவரை கைது செய்துள்ளது பற்றி கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த கனிமொழி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம் ஒன்றிய அரசு போல பாஜக போல திமுக பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை, நீதி,நியாயத்தை நிலை நாட்டுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாரையும் மிரட்டுவதற்காக செய்துவிட்டு பாதியில் நிறுத்தப் போவதில்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு அதிகாரி லஞ்சம் வாங்கியதை வைத்து அனைத்து அதிகாரிகளையும் குற்றம் சொல்லக்கூடாது என பேசியது குறித்த கேள்விக்கு, பாஜக மீது பாஜக நிர்வாகிகள் மீது சிஏஜி அறிக்கையில் முன்வைத்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. அதற்கு பதில் சொல்லட்டும் என்று கனிமொழி பதில் அளித்தார்.