4 மாநிலத் தேர்தல் முடிவுகள் இன்று (டிச 3) வெளியாயின. ம.பி, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. தெலுங்கானா காங்கிரஸ் வசமானது.
2024 மக்களவைத் தேர்தலுக்கான அரை இறுதி என்ற அறிமுகத்தோடுதான் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கியது.
தேசமே எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகி, அதில் 4-ல் 3 மாநிலங்களை பாஜகவின் வெற்றிக் களமாக்கிக் கொடுத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது பாஜக. அத்துடன் சத்தீஸ்கர், ராஜஸ்தானை காங்கிரஸிடமிருந்து பாஜக பறித்துக் கொண்டுள்ளது.
காங்கிரஸ் வெற்றித் தடம் பதித்துள்ளது, தெலங்கானாவில்.
மத்தியபிரதேசம்
மத்தியப் பிரதேசத்தில் கடந்த 1993 மற்றும் 1998 தேர்தலில் காங்கிரஸின் திக்விஜய் சிங் தலைமையில் அடுத்தடுத்து வென்று ஆட்சி அமைத்ததற்கு பின்னர் காங்கிரஸிடமிருந்து மாநிலத்தை தட்டிப் பறித்த பாஜக 2003-ம் ஆண்டிலிருந்து தனது வேரை மத்தியப் பிரதேசத்தில் ஆழமாக ஊன்றியுள்ளது.
அதற்கு பின்னர் நடந்த நான்கு சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. என்றாலும் நீண்ட கால ஆட்சி, கால மாற்றம் ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு இந்த முறை பாஜகவிடமிருந்து ஆட்சியைத் தட்டிப் பறிக்கும் எண்ணத்துடனும், அடுத்த ஆண்டு வர இருக்கும் மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டும் பெரும் நம்பிக்கையுடன் இந்தத் தேர்தலை காங்கிரஸ் சந்தித்தது.
ஆனால், 164 தொகுதிகளில் பாஜக பெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. காங்கிரஸ் 65 இடங்களை பிடித்தது.
சத்தீஸ்கரை இழந்த காங்கிரஸ்
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய தேவை. ஆளும் கட்சியான காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், அவற்றைத் தவிடுபொடியாக்கியுள்ளது பாஜக. படுதோல்வியிலிருந்து மீண்டுள்ளது.
2003-ல் இருந்து தொடர்ந்து 3 முறை சத்தீஸ்கரில் ஆட்சி செய்தது பாஜக. 2018-ல் பாஜக படுதோல்வி அடைந்திருந்தது. அப்போது பாஜக ஆளும் கட்சி. வெறும் 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக வலுவான எதிர்க்கட்சியாகக் கூட இருக்கத் தகுதியற்றுப் போயிருந்தது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் 54 இடங்களை எளிதாக வசப்படுத்தி விட்டது, பாஜக.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றியை உறுதியாக நம்பிய நிலையில் 35 இடங்களை மட்டுமே வென்று ஆட்சியை இழந்து விட்டது.
ராஜஸ்தானில் பாஜக
ராஜஸ்தானில் 200க்கு 199 இடங்களில் தேர்தல் நடந்தது. இதில் பாஜக 115 தொகுதிகளை கைப்பற்ரியது.
ஆளும் காங்கிரஸ் கட்சி 70 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கண்டு இந்தத் தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளது.
கேசிஆர் எனும் கோட்டை
தெலங்கானா மாநிலம் உருவாகக் காரணமாக இருந்த போராளி, மூத்த தலைவர் கே.சந்திரசேகர ராவ். ஆனால் அவர் இத்தேர்தலில் வீழ்த்தப்பட்டுள்ளார்.
தெலங்கானாவில் ஹாட்ரிக் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸிடம் படுதோல்வி அடைந்துள்ளது, தெலங்கானா. காங்கிரஸின் வெற்றி கவனம் பெற்றிருந்தாலும், மாநில கட்சியை வீழ்த்தி தேசிய கட்சிகள் தடம் பதிப்பது பிராந்திய அரசியலுக்கு உகந்தது அல்ல என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
அங்கு காங்கிரஸ் 65 இடங்களை வென்று ஆடசியில் அமர்கிறது. பிஆர் எஸ் 39 இடங்களில் மட்டுமே ஜெயித்து ஆட்சியை இழந்தது.
பாஜக 8, உவைசியின் கட் சி 7 இடங்களில் வென்றுள்ளன .
இவற்றோடு தேர்தல் நடந்த மிசோராமில் இந்து (திங்கள்) வாகு எண்ணிக்கை நடைபெறுகிறது.
4 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் என மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. 2 மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. அடுத்த 2024 மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சத்தீஸ்கரில் 11 மக்களவைத் தொகுதிகள், ராஜஸ்தானில் 25 மக்களவைத் தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 29 மக்களவைத் தொகுதிகள் என மொத்தம் 69 மக்களவைத் தொகுதிகள்தான் காங்கிரஸின் அக்கறையாக இருக்க வேண்டும்.
கெலாட் – பைலட் மோதல், பாகெல் – தியோ மோதல் ஆகியன ராகுல் காந்தியின் அத்தனை முயற்சிகளையும் வீழ்த்தியுள்ளன. இதனால் கட்சியில் உட்பூசல்களை சரி செய்வதும் காங்கிரஸுக்கு முக்கியமான மக்களவைத் தேர்தல் ஆயத்தப் பணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ராகுல் கருத்து
தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ள ராகுல் காந்தி, கருத்தியல் ரீதியான போட்டி தொடரும் எனத் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சூலே இந்த 4 மாநில தேர்தல் முடிவுகளால் மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாதிக்கப்படாது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.