ராஜஸ்தானில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரசிடம் இருந்து பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான வசுந்தரா ராஜே சிந்தியா, தான் போட்டியிட்ட ஜல்ராபதான் தொகுதியில் 53,193 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வசுந்தரா ராஜே முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.